سُورَةُ النَّاس     

       ஸூரதுன் நாஸ்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!

பெயர் : ஸூரதுன் நாஸ்(மனிதர்கள்)

இறங்கிய காலப்பகுதி : மக்கீ

வசனங்கள்: 6

இந்த கூற்றைக் கூறிய இப்னு கஸீர் இமாமவர்கள், இந்த அதிகாரமுள்ள அல்லாஹ்விடம் மனிதனை குழப்பும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு கட்டளையிடுகிறான், ஏனெனில் ஷைதான் மனித உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். என்று கூறி, அதற்கு ஆதாரமாக பின்வரும் நபிமொழியை பதிவுசெய்தார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடர், ‘அபூதமீம்மா’ வழியாக, ஆஸிமுல் அஹ்வல் அறிவிப்பாக, ‘நபிகளாரின் வாகனத்தில் பின்னே பயணித்தவர் கூறினார்’ (அஹ்மத்: 20591) என்றும், அபூதமீமா வழியாக, காலிதுல் ஹத்தாஃ அறிவிப்பாக அபூமலீஹ் அறிவிப்பாக”நபிகளாரின் வாகனத்தில் பின்னே பயணித்தவர் கூறினார்’ (அபூதாவூத்:4952) என்றும், அபூதமீமா வழியாக, ஆஸிம் அல்லது ஷுஃபாவின் அறிவிப்பாக ஒருவர் ”நபிகளாரின் வாகனத்தில் பின்னே பயணித்தவர் கூறினார்’ (அஹ்மத்: 20592) என்றும் பலவாறாக அறிவிக்கப்பட்டுள்ளது. இமாம் ஹாகிம் அவர்கள் (முஸ்தத்ரக் ஹாகிமில் 7792 வது செய்தியாக) இதனை பதிந்து விட்டு, ‘பெயர் குறிப்பிடப்படாத அவரை சிலர் அபூமலீஹின் தந்தை ‘உஸாமா பின் மாலிக்’ என்று குறிப்பிட்டுள்ளனர் என்று கூறி ஆதரப்பூர்வமானது என்று கூற, தஹபீ இமாமவர்களும் அதனை சரிகண்டுள்ளார்கள். (ஹாகிம், ஹதீஸ் குறிப்பு) எனேவ இந்த ஹதீஸின் சில அறிவிப்பாளர் தொடரில் ஒரு மனிதர் என்று வந்திருப்பது ‘அபூமலீஹ்’ என்று வேறு அறிவிப்பாளர் தொடரில் வந்திருப்பதும், அறிவிப்பாளர்களில் யாரும் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டவராக இல்லை என்ற அடிப்படையிலும் இதனை ஆதாரப்பூர்வமானது என்று கூறலாம். (அல்லாஹு அஃலாம்) இமாம் அல்பானீ, ஷுஐபுல் அர்ணாவூத் போன்ற அறிஞர்களும் ஸஹீஹ் என்றே கூறியுள்ளனர். 

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: ‘இதுவே சத்தியமும், பகுத்தறிவின் வெளிப்பாடுமாகும். ஏனெனில்; ‘அதிகாரத்தின் வெளிப்பாடு அடிமைத்தனத்தை கட்டாயமாக்கும், அடிமைத்தனம் என்பது வணக்கம் செலுத்துவதை (கட்டுப்படுவதை) யும் அதில் ஓர்மைப்படுத்துவதையும் கட்டாயப்படுத்தும். ஏனெனில்; ஒருவருக்கு சொந்தமான அடிமை அவனது பொறுப்பாளனுக்கு செவிசாய்த்து, கட்டுப்படுவதென்பது சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே கடமையாகிவிடும், அந்த பொறுப்பாளனும் அவனைப்போன்ற ஒரு   அடிமையாக இருந்தாலும் சரியே. அப்படியிருக்க அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அடியான் தன் இரட்சகனுக்கு வணங்கத் தகுதியானவனுக்கு எப்படி இருக்கவேண்டும்?, தனித்துவமான, படைப்பினங்களின் தேவைக்காக நாடப்படுகின்ற, ஒரே இறைவனான அந்த அரசனுக்கு எப்படி கட்டுப்படவேண்டும்??'(அல்வாஉல் பயான்)

மேலும் இந்த மூன்று பண்புகளும் “{الرَبِّ} படைத்து பரிபாலிப்பவன், {المَلِكِ } ஆட்சி அதிகாரங்களுக்கு சொந்தக்காரன், {الإِلَهِ} வணக்கத்திற்கு தகுதியானவன் (இலாஹ்)” அல்குர்ஆனின் துவக்க ஸூரா பாதிஹாவின் துவக்கத்திலும் இடம்பெற்றுள்ளன, {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ } அகிலத்தாரை படைத்து பரிபாலிக்கும் ரப்பான, அன்பு, கருணை மிக்க, மறுமை நாளின் அதிபதியான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. (1:1-3)

ஸூரா பகராவின் துவக்கத்திலும், மனித சமூகத்தை அழைத்து தன்னை மட்டும் வணங்குமாறு இடும் முதல் கட்டளையிலும் அவனுக்கு வணக்கம் செலுத்துவதை கட்டாயப்படுத்தும் காரணிகளை தெளிவுபடுத்துவதனுடன் சேர்த்தது இடம்பெற்றுள்ளன. ஏனெனில் அவனே அவர்களின் இரட்சகன் ரப்பாவான். (மனிதர்களே என்று அலைக்கும் முதல் இடத்தில்) அல்லாஹ்:

என்று கூறிவிட்டு, அவனுக்கு மட்டும் வணக்கத்தை கட்டாயமாக்கும் காரணத்தை:

என்று கூறி தெளிவுபடுத்திவிட்டு, தொடர்ந்து அவனது அதிகாரங்களை தெளிவுபடுத்துகிறான:

என்றால்; படைப்பதிலும், ஆகாரம் அளிப்பதிலும், கூறப்பட்ட அனைத்திலும் அவனுக்கு நிகர் இல்லை என்பது போன்று, இதன் உண்மை தன்மையை அறிந்துகொண்டு வணக்கம் செலுத்துவதில் அவனுக்கு நிகர் ஏற்படுத்த வேண்டாம். என்பதாகும். மேலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனுக்கு நிகரானவைகளை மறுப்பதே, (அல்லாஹ்வை) ஏற்று (நிகரானவைகளை) நிராகரித்தல் என்ற அடிப்படையில் ‘லாஇலாஹ இல்லல்லாஹ், வணக்குத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்பதன் அர்த்தமாகும். (அல்வாஉல் பயான்)

மண உறுதி ஷைதானை விரட்டும்;

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறினார்கள்: ‘ஷைதானின் ஊசலாட்டம் என்பது சந்தேகத்தை தோற்றுவித்தல், மனக்குழப்பத்தை ஏற்படுத்தல் என்பதாக இருந்தால், இஸ்லாமிய சட்டம் ஒரு முஃமினுக்கு உறுதியானதையும், தடுமாற்றம் இல்லாததையுமே எடுக்கச்செல்லும். அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும் சில நபிமார்களை அவர்களிடமிருந்த உறுதிப்பாட்டை வைத்து அல்லாஹ் புகழ்ந்து, அவர்களை பின்பற்றுமாறும் ஏவுகிறான். அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும் சட்டக்கலை விதிகளில் ஒன்றாக ‘«الْيَقِينُ لَا يُرْفَعُ بِشَكٍّ» ‘உறுதியானது சந்தேகத்தைக் கொண்டு நீங்காது‘ என்பதும் இருக்கிறது.

எனவே கட்டாய சட்டங்கள் (பர்ள்,ஸுன்னத்,வாஜிப் போன்ற அஹ்காமுத் தகாலீப்) அனைத்தும் உறுதியின் அடிப்படையிலேயே எடுக்கப்படவேண்டும்,

நம்பிக்கை (அகீதா) சார்ந்தவைகளும் உறுதியை அடிப்படையாகக் கொண்டதே. வணக்கவழிபாடுகளிலும் நிய்யத் அவசியமாகும், நிய்யத் வைப்பதில் உறுதி கொள்ளுதல் என்பது நிபந்தனையாகும்.

அதேபோன்றுதான் அனைத்துவிதமான கொடுக்கல், வாங்கல் ஒப்பந்தங்களும் உறுதியின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்படவேண்டும்,

இவை அனைத்தின் மூலமும் பெறப்பட்ட உறுதித் தன்மையென்பது, சந்தேகத்தையும், தடுமாற்றத்தையும் போக்கிவிடக்கூடியதாகும். ஒரு முஃமினின் உள்ளத்தில் சந்தேகத்திற்கும், ஷைதானிய ஊசலாட்டத்திற்கும் இடமே இருக்காது.  நிச்சியமாகவே உமர் ரலி அவர்கள் வரும் வழியை விட்டே ஷைதான் விரண்டோடுவான்.  (அல்வாஉல் பயான்)

எனவே இந்த வரிகள் மூலம் ஒரு முஃமின் ஷைதானின் ஊசலாட்டம், வீண் சந்தேகம் போன்ற வஸ்வாஸ் நோயிலிருந்து விடுபட அவன் அனைத்து விடயங்களிலும் உறுதியயையும், ஆதாரத்தை சார்ந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்வஸ்வாஸ் மூலம் இறைநம்பிக்கையை குழப்பும் ஷைதான்;

இந்த நபிமொழியை சிந்தித்தால் உறுதியான ஈமானை புரிந்து கொள்ளலாம். ஷைதான் உள்ளத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான், நபித்தோழர்களோ அதனை தவறு என்று கண்டுகொண்டு அதனை வாயால் பேசுவதை தவறு என்று கருதுகின்றனர். அந்த அளவு அவர்களது இறை நம்பிக்கை பலமாக இருந்தது. அப்படி பலமான நம்பிக்கை உள்ளவர்களை ஷைதானால் ஒன்றும் செய்துவிட முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்:

இப்பாதத்களில் அல்வஸ்வாஸ் சந்தேகத்தை ஏற்படுத்தி அதனை பால்படுத்த முயற்சிக்கும் ஷைதான்;

வுழு முறிவது (காற்று பிரிவது போன்ற) உணர்வு ஏற்பட்டால் சத்தம் கேட்காமல், நாற்றம் வீசாமல் வுழு முறிந்ததாக முடிவு எடுக்கக் கூடாது, ((புகாரி: 137,177,2056,முஸ்லிம். முன்னால் பதியப்பட்டுள்ளது)) சிறுநீர் சொட்டுக்கள் வடிவது போன்று இருந்தால் ஆடையை பார்த்து உறுதிப்படுத்தி முடிவு எடுக்கவேண்டும், சந்தேகத்திற்கு ஆளாகி ஷைதானுக்கு அடிமைப்பட்டுவிடக்கூடாது. நஜீஸ் அசுத்தம் பட்டது போன்று ஊசலாட்டம் ஏற்பட்டால் நுகர்ந்து பார்த்து உறுதிப்படுத்த வேண்டும், சந்தேகத்தை வைத்து எம்மை நாமே குழப்பிக்கொள்ளக் கூடாது, இதுவே ஷைதான் எம்மை வழிகெடுக்கும் இடமாகும்.

அடுத்தவர்களை தப்பெண்ணம் கொள்ள வைக்கும் ஷைதான்;

இதற்கான தீர்வு உறுதியாக விசாரித்து முடிவெடுப்பதும், உள்ளத்தை சுத்தப்படுத்துவதுமே.

பொதுவாக ஷைதானிடமிருந்து பாதுகாப்புபெற “لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ” என்பதை கூறிக்கொள்வோம்!

இத்தோடு ஸூரா நாஸின் விளக்கம் முற்றுப்பெறுகிறது.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *