நபிகளாரும், அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட நிகழ்வும்:

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

ஸூரா அல்பலகின்(113) விளக்கத்தில் நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டபோது, அதனை செய்த லபீத் பின் அஃஸமுக்கு எதிராகவே இந்த ஸூரா இறங்கியதாக விரிவுரையாளர்கள் ஒன்றுபட்டு கூறியுள்ளனர் என்று பார்த்தோம். ஆனாலும் இஸ்லாமிய உம்மத்தில் ((முஃதஸிலாக்களும் அவர்களது சிந்தனைத் தாக்கத்தால் ஹதீஸ்களை மறுக்கும் சிந்தனைப் போக்கு கொண்ட)) சிலர் நபியவர்களுக்கு சூனியம் வைத்த நிகழ்வு குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கின்றனர். அது பற்றிய சில குறிப்புகளை நோக்குவோம்.

அஹ்மதின் (24347) அறிவிப்பில்: ஆறு மாதங்கள் இந்த நிலையில் இருந்ததாக பதியப்பட்டுள்ளது, அது மஃமர்’ அவரகள் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது, அவர் நம்பகமான அறிவிப்பாளாராக இருந்தாலும், ஹிஷாம் அவர்களைத் தொட்டு அறிவிப்பதில் ஒரு விடயம் இருக்கிறது என்று இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பலருக்கும் மாற்றமாக வந்த செய்தியே ஆறு மாதங்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். எனவே பல நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இப்படி விமர்சனம் உள்ள ஒருவர் மேலதிகமாக அறிவித்தால் அதனை ஆதாரமாக கொள்ளமுடியாது என்பது ஹதீஸ்களை விதியாகும். அத்தோடு அதனை ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக்கொண்டாலும் அது குர்ஆனின் பாதுகாப்பில் எந்த பாதிப்பையும் செலுத்தமாட்டாது என்பதை பின்னால் பார்க்கலாம்.

அடுத்து, நபியவர்களே சென்று எடுத்ததாக வரும் நம்பகமான அறிவிப்புகளுக்கு இடையில், ((‘அலியே எடுத்து வாரும்!’ என்று  அல்முஃஜமுல் அவ்ஸதில்:5926)) வரும் செய்தியானது, ‘முரஜ்ஜா பின் ரஜாஃ‘ என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டதாகும். அவர் ஸதூகுன் சிலவேலை தவறுவிடுபவர், பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டவராவார். எனவே நம்பகமானவர்களுக்கு முரணாக அறிவிக்கும்போது அதனை எடுக்கமுடியாது.

அடுத்து,

இந்த அறிவிப்பு ‘அஃமஷ்’ வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது, அவர் முதல்லிஸ். பலவீனமானவர்களை விட்டுவிட்டு இருட்டடிப்பு செய்து அறிவிப்பவர்‘  என்று விமர்சிக்கப்பட்டவர், அவர் இதனை உறுதியான ‘கற்றுத்தந்தார்’ என்பது போன்ற வார்த்தையால் அறிவிக்காமல், அவரைத் தொட்டு என்ற வாசகம் கொண்டே அறிவித்துள்ளார். எனவே இந்த தொடரில்தான் அலி ரலி அவர்கள் குல் ஸூரா இரண்டையும் ஓதியதாகவும், ஓதும்போது முடிச்சுகள் அவிழ்ந்ததாகவும் வந்திருக்கிறது‘ அனைத்தும் பலவீனமானதாகும்.

அடுத்து, அதனை எடுத்தார்கள், எடுக்கவில்லை என்ற செய்தியைப் பொறுத்தவரை நிதானமாக சிந்தித்தல் அதில் முரண்பாடுகள் இல்லை, மேலதிக தகவல்கள் இருக்கின்றான என்பதை புரியலாம். அது தான்: “நபியவர்கள் எடுக்கவில்லை என்று மறுத்தது, ‘ஈத்தம் பாலை உறைக்குள் இருந்ததை’ என்று புரிந்து, எடுத்தார்கள் என்பதை, ‘கிணற்றுக்குள் இருந்து எடுத்தார்கள்என்று புரிந்து கொண்டால்” அனைத்து அறிவிப்புக்களையும் சேர்த்து ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த நபி மொழியில் இடம்பெற்றிருக்கும் சில வார்த்தை வித்தியாசங்களை எடுத்துக்காட்டி, முஃதஸிலாக்கள் வழியில் ஹதீஸை மறுக்க நினைப்போர், உண்மையில் நபிமொழிகளையும் அதை சார்ந்தோரையும் நேசிப்பவர்களாக இருந்தால், “நேர்வழிப்பெற்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை, எப்படி ஒன்றை ஒன்றுடன் சேர்த்து விளங்கினார்கள் என்பதை மனத்தூய்மையுடன், பத்ஹுல் பாரியை ஒருதடவை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்” என்பதை அவர்களுக்கு அறிவுரையாக சொல்லவிரும்புகிறேன். (அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.)

சூனிய ஹதீஸில் வார்த்தை வித்தியாசங்கள் வந்திருப்பது போன்று, மூஸா நபியின் நிகழ்வு வந்திருக்கும் பிரதான இரண்டு இடங்களிலும் வார்த்தை வித்தியாசமும், அதிகபடியான விளக்கமும் இருக்கிறது.

  1. கயிறுகளும், தடிகளும், அவர்களின் சூனியத்தின் காரணமாக, விரைந்து ஓடுவதுபோல் தோன்றியது. (20:66) எதை போட்டார்கள் என்பதும், விரைந்து ஓடுவது போன்று தோன்றியது என்பதும் (7:116-121) ல் இல்லை.
  2. மூஸா நபி பயத்தை உணர்ந்தார். (20:67), அது 7:116-121 ல் இல்லை
  3. கண்ணுக்கு சூனியம் வைத்தார்கள், பயமுறுத்தினார்கள் 7:116-121 ல் வருகிறது, 20: 66 தொடரில் இல்லை.
  4. அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரரின் சூழ்ச்சியே ஆகும் 20:69, மகத்தான சூனியத்தை அவர்கள் கொண்டு வந்து விட்டனர். 7:116
  5. உண்மை வெளிப்பட்டு விட்டது, அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாகியும் விட்டது.7:118, சூனியக்காரன் எங்கு வந்தபோதிலும் வெற்றி பெறமாட்டான் 20:69
  6. நாங்கள் ஹாரூன், மூஸா ஆகிய இவ்விருவருடைய இரட்சகனை விசுவாசித்து விட்டோம்”, 20:70, “அகிலத்தாரின் இரட்சகனை நாங்கள் ஈமான் கொண்டுவிட்டோம்” 7:121

எனவே குர்ஆனில் வரும் இந்த வித்தியாசங்களை ஒன்றோடு ஒன்று முரண்பட்டவையாக நாம் நோக்கவும் மாட்டோம், அவை முரண்பாடுகளும் இல்லை, மேலாதிக விளக்கங்களே. அதேபோன்று ஹதீஸில் வரும் வார்த்தைகளை ஏன் நிதானமாக வாசித்து புரியமுடியாது.

  • நபிகளாருக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது என்றால், அதுவும் ஆறு மாதங்கள் நீடித்தது என்றால் வஹியில் இறைச்செய்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு வாதமாகும்.

உண்மையில் குர்ஆனின் சிறப்புத் தன்மையை அறிந்தவர் ஒருபோதும் இந்த வாதத்தை ஏற்கமாட்டார். ஏனெனில் அல்குர்ஆன் பாதுகாக்கப்படும் என்பதுதான் அதன் முஃஜிசாவே. (மனிதனை அதுபோன்ற ஒன்றை கொண்டுவருவத்திலிருந்து இயலாமலாக்கியதே).

  • சூனியக்காரன் எப்படி வந்தாலும் வெற்றிபெற மாட்டான் என்று குர்ஆன் கூறியிருக்க அது எப்படி நபிகளாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு வாதமாகும்.

வெற்றி பெறமுடியாது என்பதே அவன் ஏதோ ஒன்றை செய்வான், ஆனால் தோல்வி அடைவான் என்பதைக் காட்டுகின்றது. தோல்வி அடைவான் என்பதை வைத்து ஒன்றும் செய்யமுடியாது என்று முடிவெடுப்பது குர்ஆனுக்கே முரன்பட்ட வாதமாகும். அதனை அந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களைப் பார்க்கும் போது அறியலாம்.

ஹதீஸிலும் குர்ஆன் வசனத்திலும் வரும் அரபு வாசகங்களை கவனியுங்கள் புரியும்:

يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى‏  فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى

يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ صَنَعَ شَيْئًا وَلَمْ يَصْنَعْهُ

  • மூஸா நபி பயப்படும் அளவுக்கு கம்பும் தடியும் விரைந்து செல்வது போன்று பிரமையூட்டப்பட்டது, செய்யாத ஒன்றை செய்வது போன்று பிரமையூட்டப்பட்டது முஹம்மது நபிக்கு.
  • மூஸா நபிக்கு சூனியம் வைத்தது அவரது விரோதிகள், முஹம்மது நபிக்கு சூனியம் வைத்தது அவரது எதிரி சமூகம் யூதர்கள்.
  • தாக்கம்; மூஸா நபியின் கண்ணுக்கு நடக்காதது நடந்ததுபோன்று காட்சியளித்தது,உள்ளத்தில் பயத்தை உணர்ந்தார்கள், முஹம்மது நபிக்கு உள்ளத்தில் நடக்காதது நடந்தது போன்று இருந்தது.
  • மூஸா நபியின் அற்புதம் கண்ணோடு சம்பந்தப்பட்டது, அது மாறியது, முஹம்மது நபியின் அற்புதம் உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது அது மாறியது.

இரண்டிலும் தோல்வி சூனியக்காரர்களுக்கு, வெற்றி நபிமாருக்கு.

வித்தியாசம் என்ன, மூஸா நபி நிகழ்வு குர்ஆனில், முஹம்மது நபி நிகழ்வு ஹதீஸில். குர்ஆனில் வந்தால் ஏற்பதும் ஹதீஸில் வந்தால் மறுப்பதுமா முஸ்லிமின் வழிமுறை??.

யூதன் ஏன் விமர்சிக்கவில்லை??, அவன் அவனது வேத அடிப்படையில் முஹம்மது நபிக்கு நடந்தது சாத்தியம் என்று நம்பியதனால், ஆனால் முஸ்லிம்களில் சிலர் அவர்களது வேதத்தின் அடிப்படையில் நோக்காததன் காரணமாக ஹதீஸை மறுக்கும் நிலை ஏற்பட்டது அல்லாஹ் நம்மை காப்பானாக!

அடுத்து, நபியவர்கள் அதன் மூலம் மரணித்திருந்தாலோ, அல்லது இறைச்செய்திக்கு எதிராக பேசியிருந்தாலோ அப்படி வாதம் வைக்கலாம். மாற்றமாக மரணிக்கவுமில்லை, அல்லாஹ் கொடுத்த முடிவையும், மலக்குமார் வந்த நிகழ்வையும் அழகாக எடுத்து சொல்லி, சூனியம் வைக்கப்பட்டதையும் கண்டு, அதனை எடுத்து, சமூகத்திற்கு தீங்கும் நடக்காதவாறு வழியும் காட்டிக்கொடுத்தார்கள் என்றால், தீங்குசெய்ய நினைத்த யூதர்களுக்கு தோல்வியே கிடைத்து. மட்டுமல்லாமல், சூனியத்தை எப்படி கையாளவேண்டும் என்ற மார்க்க சட்டமும் கிடைத்து, சூனியத்தை வைத்து பயமுறுத்திய யூத சமூகத்திற்கே கேவலமாக அமைந்தது. அதனை அந்த நபிமொழி மூலம் தெளிவாக புரிந்துகொள்ளலாம். (அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்)

  • நபிக்கு தீங்குசெய்ய முடியாது என்று குர்ஆன் கூற, சூனியம் பற்றிய ஹதீஸ் தீங்கு செய்ததாக கூறுகிறதே என்பதும் ஒரு வாதமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

அதாவது; நபியவர்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தை எத்திவைத்தல் என்ற பணியை தடுக்கும் அளவுக்கு நபிகளாருக்கு யாராலும் எந்த தீங்கும் செய்ய முடியாத அளவு பாதுகாப்பான் என்பதே. வேதத்தை எத்திவைப்பதற்கு பாதமாகும் எந்த தீங்கையும் விரோதிகளால் செய்ய முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டே, சூனியம் செய்யப்பட நிகழ்வைக் கூறும் இந்த ஹதீஸ்தான். சூனியம் செய்யப்பட நிலையில் தான் நிதானமாக நடந்த நிகழ்வை நபியவர்கள் எடுத்துரைக்க, ஆஇஷா நாயகி எடுத்துரைத்தார்கள். நபிமொழியை வாசித்தால் அதனை புரியலாம்.

அடுத்து இதுவல்லாத நபிகளாரின் தூதுப் பணிக்கு பாதிப்பு ஏற்படாத பல தீங்குகள் நபிகளாருக்கு நடந்திருக்கின்றன, நபியவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்பதே அடிப்படை. தீங்கே வராது என்பதல்ல.

இந்த ஹதீஸ்களை நோக்கும்போது அல்லாஹ் பாதுகாப்பான்’ என்று குர்ஆன் என்ன கூறவருகிறது என்பதை நன்றாக புரியலாம். சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏற்படலாம், அதனால் பாதுகாப்புக்கென்று ஒருவரை எதிர்பார்க்கிறார்கள், அதேநேரம் யூதப் பெண்ணைப் பார்த்து, ‘நீ என்னை கொள்வதற்கு சாட்டப்படவில்லை’ என்றும் கூறியுள்ளார்கள், என்பதோடு, அவளது விஷத்தின் தாக்கமும் நபிகளாருக்கு இருந்துள்ளது. என்றால் நபிகளாரை அவர்களது பணியிலிருந்து தூரமாக்கும் அளவுக்கு தீங்கு செய்யும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதை புரியலாம்.

  • நபியவர்களை ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்று சொல்பவன் அநியாயக்காரன் என்று குர்ஆன் கூறுகிறது, இந்த ஹதீஸோ நபியவர்களை ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்கிறது, இது முரண்பாடல்லவா என்ற வாதமும் ஒன்றாகும்.

அடுத்து அந்த வசனத்தின் முன்னாலும் பின்னாலும் வந்திருப்பதை உற்றுநோக்கினால் இன்னும் தெளிவாக அதனை புரியலாம். அதாவது; இணைவைப்பாளர்கள் பலவிடயங்களை கூறினார்கள், அதில் அவர் சாப்பிடுகிறார், சந்தைகளில் நடமாடுகிறார், இன்னும் சில’ அவை அனைத்துக்கும் சேர்த்தே நபிகளாருக்கு எதிராக சொல்லப்பட்ட உதாரணங்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே நபிகளாரை உண்ணுபவர், சந்தையில் நடமாடுபவர்’ என்று நாம் சொன்னால் குற்றவாளியாகுவோமா என்றால் இல்லை என்போம், அதனால் தான் நபியவர்களை ‘ஒரு மனிதர்’ என்று கூறுகிறோம். அதே போன்று சூனியம் செய்யப்பட்டவர்’ என்று ஏன் சொல்லப்பட்டது என்பதை சிந்தித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம். விரோதிகள் நபிகளாரை வானவரல்லவே, அவரும் எங்களைப் போன்று சாதாரண மனிதன் என்று கூறி’ மக்களை நபிகளாரைவிட்டு தூரமாக்க முயன்றனர், முஸ்லிம்கள் நாங்கள் அவர் மனிதர் தான், அவரும் சாப்பிடுகிறார், குடிக்கிறார், அவருக்கு இறைசக்தி இல்லை’ என்று கூறி முறையாக நபியவர்களை ஈமான்கொள்ள வைக்கிறோம். அல்லாஹ் கூறுகின்றான்:

எனவே இந்த வசனங்களை புரிவது போன்று, அந்த ஹதீஸை அந்த வசனத்தோடு சேர்த்து நோக்கினால் அழகாக புரிந்து இரண்டையும் ஏற்கலாம்.

அடுத்து முக்கிய விடயம் என்னவென்றால், நபிகளாரை நோக்கி வைக்கப்பட்ட பல அடைமொழிகளை மருத்துரைத்த அல்லாஹ் ‘மஸ்ஹூரா, சூனியம் செய்யப்பட்டவர்’ என்பதை நேரடியாக மறுக்கவில்லை.

எனவே அல்குர்ஆனில் ‘அவர் சூனியம் செய்யப்பட்டவரல்ல’ என்று நேரடியாக வந்து ஹதீஸில் இப்படி வந்திருந்தாள் கூட முரண் என்பதில் நியாயமிருக்கலாம். அப்படி எந்த முகாந்திரமும் இல்லாத போது தன் விளக்கங்களுக்கு முரண் என்பதற்காக ஹதீஸை மறுப்பது எந்தளவு நியாயமோ!!. அல்லாஹ் போதுமானவன்.

இந்த வசனத்தை நோக்கினால்; ஷைதான்கள் சூனியத்தை கற்றுக்கொடுத்தார்கள், அவர்களும் காபிர்களாகினர், கற்றவரும் காபிராவார் என்ற எச்சரிக்கை, அல்லாஹ்வின் அனுமதியின்றி தீங்குசெய்யமுடியாது, அதனை கற்றுக்கொண்டவர்களுக்கு மறுமைப் பாக்கியம் இல்லை. இதனையெல்லாம் இல்லாத ஒன்றுக்கு எச்சரிக்கையாக அல்லாஹ் ஒரு போதும் சொல்லமாட்டான். எனவே சூனியம் இருக்கிறது என்று நம்புவதோடு அதிலிருந்து ஒதுங்கி வாழவேண்டும். விபச்சாரம் இருக்கிறது அதைவிட்டு ஒதுங்க வேண்டும் என்பது போல.

சாமிரியின் இந்த செயலால் மக்கள் சோதிக்கப்பட்டதை, அல்லாஹ் சோதித்ததாக குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் என்றால், அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் சூனியம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அடிப்படை. மனிதர்களது நம்பிக்கையை சோதிக்க அல்லாஹ் வைத்திருப்பவற்றில் சூனியமும் ஒன்றே! அல்லாஹ் கூறுகின்றான்:

புகாரியில் வரும் இந்த பகுதியை அறிவிக்கும் ‘இஸ்ஹாக் பின் நஸ்ர்’ அவர்கள் இப்னு ஹஜர் இமாமிடத்தில் ‘ஸதூக்’ எனும் தரத்தில் உள்ளவராவார். அவரைத்தொட்டு அறிவித்திருப்பது புகாரி இமாம் மாத்திரமே, அவரது ஆசான்களாக ஆறு நபர்கள் மாத்திரமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். (அல்லாஹு அஃலம்))

எனவே குர்ஆன், சுன்னாவின் மூலம் தரிபட்ட ஒன்றை நபித்தோழர்கள் புரிந்துகொண்ட விதத்தில் நாமும் புரிந்தால் நேர்வழி பெறலாம். அதற்கு மாறாக இஸ்லாமிய வரலாற்றறில் முஃதஸிலாக்களையும், அவர்களை போன்று தன் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களையும் பின்பற்றி முடிவுகள் எடுக்க ஆரம்பித்தால் வழிகெட்டு போக வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் புரிந்து செயற்படுவோம் அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக!!!

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *