سُورَةُ الْمَسَد 

  ஸூரதுல் லஹப்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!

பெயர்: ஸூரதுல் மஸத், லஹப் (ஜுவாலை)

இறங்கிய காலப்பகுதி : மக்கீ

வசனங்கள்: 5

அபூலஹப் நபி ஸல் அவர்களின் பெரிய தந்தைகளுள் ஒருவராவார், அவனது பெயர் அப்துல் உஸ்ஸா பின் அப்தில் முத்தலிப் ஆகும், அவனது புனைப் பெயர் அபூ உத்பா என்பதாகும், அவன் அபூ லஹப் என்று அழைக்கப்பட்டது அவனது முகக் கவர்ச்சியின் காரணத்தாலாகும். நபியவர்களுக்கு அதிக நோவினை செய்யக்கூடியவனாகவும், விரோதிக்கக்கூடியவனாகவும், கேவலப்படுத்தக்கூடியவனாகவும் இருந்தான். நபிகளாரின் முதல் பிரச்சாரத்தின் போதே எதிர்த்ததனால் இந்த ஸூரா இறக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டான்.

பக்ருதீனுர் ராஸீ அவர்கள் கூறும் போது; {التَّبَابٍ}  என்றால் ‘அழிந்துபோகுதல்’ என்று கூறினார்கள், அதற்கு நிகரான வசனமே அல்லாஹ் கூறும் வசனம்:

ஏனெனில் அபூலஹப் தன்னைத்தானே தனது மோசமான கொள்கையாலும், செயலாலும் அழித்துக்கொண்டான். அல்லாஹ் கூறுகின்றான்:

எனவே குர்ஆனின் ஆதாரத்தைக்கொண்டே அழிவு, நஷ்டமடைதல் தான் நாடப்பட்டுள்ளது என்றால், ‘இரு கைகளும் அழியட்டும் என்று வந்துள்ளதன் அருத்தம் என்ன?’ என்றால், அதற்கு பதில்: ‘அது ஒரு பகுதியைக் கூறி, முழுவதையும் நாடும் இலக்கிய விடயமாகும், அது அல்லாஹ் கூறும்:

என்ற வசனத்தைப் போன்றதாகும், ஏனெனில் பொய்யுரைத்தது அந்த முன்னெற்றி ரோமத்திற்குரிய மனிதனே.

என்ற வசனம் போன்றதாகும். இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் {وَقَدْ تَبَّ} (‘நிச்சயமாக அது அழிந்துவிட்டது’ என்று (தகவல் அருத்தம் தரும் விதத்தில் ஓதியதாக) ஒரு கிறாஅத் வந்துள்ளது. (அல்வாஉல் பயான்)

{وَمَا كَسَبَ} வமா கஸப் என்றால் அவன் உழைத்தது என்று அருத்தம், அதனைக் கொண்டு அபூலஹபின் பிள்ளை நாடப்பட்டுள்ளது என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள். அதுபோன்ற  கருத்தே ஆஇஷா ரலி, முஜாஹித், அதாஃ, இப்னு ஸீரீன் போன்றவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு கஸீர்)

இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள், “நபி ஸல் அவர்கள் தன் சமூகத்தை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது அபூலஹப்; ‘எனது சகோதரனின் மகன் சொல்வது உண்மையாக இருந்தால், நான் மறுமையில் எனது சொத்தையும் பிள்ளையையும் தண்டனைக்கு பகரமாக கொடுப்பேன்’ என்று கூறியபோது {مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ} என்ற வசனம் இறங்கியது.” என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு கஸீர்)

என்ற வசனத்திற்கு நிகரானதாகும். (அல்வாஉல் பயான்)

இதே போன்று “மறுமையில் பாவிகளுக்கு சொத்துசெல்வம் பயனளிக்காது” என்று அருத்தம் தரும் வசனங்கள் ஏராளம், அவற்றுள் சில; அல்லாஹ் கூறுகின்றான்:

{ذَاتَ لَهَبٍ} தாத லஹப் என்றால் நெருப்பின் அனல், ஜுவாலை, கடுமையாக கரித்துவிடக்கூடியது என்று அருத்தம்.

புகாரி இமாவார்கள் கூறும் போது; {حَمَّالَةُ الحَطَبِ} விறகு சுமப்பவள் என்றால் கோள் சொல்லி திரிபவள் என்று அருத்தம், கழுத்தில் கயிறு இருக்கும் என்றால் ‘விறகு சுமப்பதற்காக கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு, அது மறுமையில் நெருப்பாலான சங்கிலியாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. (புகாரி: ஸூரா மஸத் விளக்க குறிப்பு)

{حَمَّالَةَ الْحَطَبِ} என்றால் ‘கோள் சொல்லி திரிபவள்’ என்று முஜாஹித், இக்ரிமா, கதாதா போன்றவர்கள் கூறினார்கள், அதனையே இப்னு ஜரீர் இமாமவர்கள் வரவேற்றார்கள், இப்னு அப்பாஸ் ரலி, ளஹ்ஹாக், இப்னு ஸைத் போன்றவர்கள்; ‘நபியவர்களின் வழியில் முற்களை வீசிவிடுபவளாக இருந்தால்’ என்று கூறினர். ஸஈதுப்னுல் முஸய்யப் அவர்கள்; ‘அவளிடம் உயர்ரக மாலை ஒன்று இருந்தது, அதனை விற்று முஹம்மதுக்கு எதிராக பாவிப்பேன் என்று கூறினாள், எனவே அதற்கு பகரமாக அல்லாஹ் நரக நெருப்பால் ஒரு மாலையை அவள் கழுத்தில் போடுவான்.’ என்று கூறினார்கள்.  (இப்னு கஸீர்)

அவனின் மனைவி குறைஷி பெண்களின் தலைவிகளில் ஒருத்தியாக இருந்தாள், அவளது பெயர் அர்வா பின்த் ஹர்ப் பின் உமையா என்பதாகும், அவளது புனைப் பெயர் உம்மு ஜெமீல், அவள் அபூ ஸுப்யான் அவர்களின் சகோதரியாவாள். இஸ்லாத்தை, நபியவர்களை எதிர்ப்பதில் தன் கணவனுக்கு துணையாக இருந்தவள், அதன் காரணமாக நரகிலும் அவனுக்கு துணையாக இருப்பாள், அதன் காரணமாகவே விறகு சுமப்பவள், கழுத்தில் முறுக்கேறிய கயிறு இருக்கும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளாள், என்றால் விரகை சுமந்து தன் கணவன் மீது போடுவாள், அவனது தண்டனை அதிகரிப்பதற்காக, அவள் அதற்கு தயாராகவே இருப்பாள்.  (இப்னு கஸீர்)

ஒரு சில அறிஞர்கள் {فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ} என்ற வசனத்திற்கு, ‘அவளது கழுத்தில் நெருப்பாலான ஒரு கயிறு இருக்கும், இதன் மூலம் அவள் நரக விளிம்புக்கு தூக்கப்பட்டு, அதன் ஆழத்திற்கு வீசப்பட்டுக்கொண்டே இருப்பாள்.’ என்று கூறினர். (இப்னு கஸீர்)

ஒன்று; நபி ஸல் அவர்கள் தனது சமூகத்தாருடன் மென்மையாகவும், இறக்கத்துடனுமே நடந்துகொண்டார்கள், அப்படியிருக்க இந்த துஅவை தன் பெரிய தந்தைக்கு எதிராக எப்படி கேட்க முடிந்தது? என்றால்; ‘அதற்கு பதிலாக:

இரண்டாவது; “”கைகள் நாசமாகட்டும், அவன் நாசமாகிவிட்டான்’ என்று ஏன் இரண்டு தடவைகள் வந்துள்ளன? ஒரு தடவையே பொதுமல்லவா?”” என்று கேட்டால் அதற்கு பதிலாக:

என்று கூறலாம்.  (அல்வாஉல் பயான்)

சில அறிஞர்கள் கூறினார்கள்: ‘இந்த ஸூரா நபிகளாரின் தூதுத்துவத்திற்கு தெளிவான சான்றாகும், ஒரு அற்புதமுமாகும், ஏனெனில் இது இறங்கிய நாளிலிருந்து அவர்கள் இருவரையும் கெட்டவர்கள், ஈமானை இழந்தவர்கள் என்று அது கூறுகின்றது, அவர்கள் இருவருக்கும் இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, உள்ரங்கமாகவோ, வெளிப்படையாகவோ அது கிடைக்கவில்லையென்றால் அது வெளிப்படையான ஆதாரமாகும். (இப்னு கஸீர்)

இந்த ஸூராவின் விளக்கத்தில் அபூ லஹபுக்கு நரகில் பானம் புகட்டப்படுவது சம்பந்தமாக ஒரு விளக்கத்தை அளித்தால் நன்றாக இருக்கும் என்ற அடிப்படையில் பின்வரும் விடயத்தை நோக்க ஆசைப்படுகிறேன்! (*)

ஸூரா மஸத் விளக்கம் முடிவுற்றது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *