ஸூரதுல் இக்லாஸ் விளக்கவுரை!

سُورَةِ الْإِخْلَاصِ

ஸூரதுல் இக்லாஸ்

PDF வடிவில் பார்வையிட CILICK செய்யவும்!

பெயர் : ஸூரதுல் இக்லாஸ்(தூய்மைப்படுத்தல்)

இறங்கிய காலப்பகுதி : மக்கீ

வசனங்கள்: 4

என்று பதியப்பட்டுள்ளது. இந்த விளக்கம் அபூ ஜஃபர் அவர்களுடையது என்று ஷுஐபுல் அர்னாவுத் இமாமவர்கள் முஸ்னத் அஹ்மதின் ஹதீஸ் விளக்கத்தில் கூறியுள்ளார்கள்.

அதேநேரம், தொழுகை சம்பந்தப் படாமல் பொதுவாக,

முபார்க் பின் பழாலா வழி யாக எனக்கு அறிவித்தார் என்ற நம்பகமான வாசகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஸஹீஹான செய்தியாகும். (அல்லாஹு அஃலம்)

இது முள்தரிபாலன செய்தியாகவே இருக்கின்றது, இமாம் அல்பானி அவர்கள் ஹஸன் என்று கூறியுள்ளார்கள். இதே செய்தி நஸாயில் (உக்பதுப்னு ஆமிர்) ரலி வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ‘அனைத்துக்கும் போதுமானதாகும்’ என்று வந்துள்ளது.

இக்ரிமா ரஹ் கூறினார்கள்: யூதர்கள் ‘நாங்கள் அல்லாஹ்வின் மகனான உஸைரை வணங்குகிறோம்’ என்றும், கிறிஸ்தவர்கள்; ‘நாங்கள் அல்லாஹ்வின் மகனான ஈஸாவை வணங்கிறோம்’ என்றும், நெருப்பு வணங்கிகளான மஜூஸிகள்; ‘நாங்கள் சூரியனையும் சந்திரனையும் வணங்குகிறோம்’ என்றும், இணைவைப்பாளர்கள்; ‘நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்’ என்றும் கூறிய போது அல்லாஹ், தன் தூதர் மீது ‘{قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} அல்லாஹ் ஒருவன் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள்’ என்று இறக்கிவைத்தான். (இப்னு கஸீர்)

வேதங்கள் இறக்கப்பட்டதும் இதனை உறுதிப்படுத்தவே!

அல்லாஹ் அவனின் கண்ணியமும் மதிப்பும் தூய்மையானது, அவனது பெயர்கள் தூய்மையாகிவிட்டன, அவனது பண்புகள் ஒப்புவமையை விட்டும் சுத்தமாகிவிட்டன, அவனே தனது பண்புகளிலும் பெயர்களிலும் செயல்களிலும் தனித்தவன், அவன் ஒருவனே. இந்த கருத்தை ஆதார அடிப்படையில் கொண்டுவந்த குர்ஆன் அறிவுபூர்வமாகவும் உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

எனவே வானமும் பூமியும் எந்த சீர்குலைவும் இல்லாமல் இருக்கிறது என்றால் கடவுள் பலது இல்லை என்பதே காரணமாகும், இதனை ஆதார அடிப்படையிலும், அறிவுபூர்வமாகவும் ஒரே வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

(அல்வாஉல் பயான்)

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும்போது, “”அல்லாஹுஸ் ஸமத் என்றால் சிலர், அதனையே அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை என்ற வசனம் தெளிவுபடுத்துகின்றது என்று கூறினர், அதனை இப்னு கஸீர் இமாம் அவர்கள் நல்ல கருத்து என்று கூறினார்கள். இன்னும் சிலர், தலைமைத்துவத்திலும் மதிப்பிலும், அனைத்தைவிடவும்  பரிபூரணத்திலும் உயர்ந்தவன் என்று கூறினர், இன்னும் சிலர், படைப்பினங்கள் தங்கள் தேவைகளுக்காக நாடி செல்லப்படுபவன், அவனோ எவர் பக்கமும் தேவையற்றவன் என்று விளக்கினர்.”” என்று பதிவுசெய்துவிட்டு,

“”பின்னுள்ள வசனம் தெளிவுபடுத்துகிறது என்பதை எடுத்துக்கொண்டால் ‘இந்த ஸூரா முழுக்கவும் அல்லாஹ் அவன் தனித்தவன், ஒருவன் என்று கூறும் முதல் வசனத்திற்கு விளக்கம்தான்’ என்பது தெளிவாகும். ஏனெனில் பிறந்தவன் தனித்தவனல்லன், ஏன்?, பிறந்தது பெற்றவரின் ஒரு பகுதியே, பெற்றவரும் ஒருவரல்ல, ஏன்?, அவனின் ஒரு பகுதி பிறந்ததில் இருக்கிறது. அவ்வாறு தான் நிகர் உள்ள ஒவ்வொன்றும். நிகர் உள்ள எதுவும் ஒன்றல்ல, எனவே இந்த ஸூரா முழுக்கவும் அல்லாஹ் தனித்துவமான ஒருவன் என்பதை உறுதிப்படுத்தக்கூடியதாகும்.”” என்று கூறினார்கள்.

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் ஸூரதுல் அன்ஆம்  {وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ} என்ற (6:14) வது வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது பின்வருமாறு தெளிவு படுத்தினார்கள்:

{وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ} அவன் உணவளிப்பான், அவன் உணவளிக்கப்படமாட்டான். என்றால் அல்லாஹ் அவனே படைப்புகளுக்கு உணவளிப்பவன், அவன் மொத்தமாகவே தேவையற்றவன், அவனுக்கு உணவுத்தேவையில்லை. இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்தி கூறுகின்றான்:

எனவே அல்லாஹ்தான் உணவளிக்கிறானே தவிர அவன் படைப்புகளின் பக்கம் எந்த தேவையும் அற்றவனே. இதனை அல்லாஹ்வே தெளிவாக கூறுகிறான்:

இந்த கருத்தை {اللَّهُ الصَّمَد} என்ற வசனத்திற்கு கூறப்பட்ட விளக்கங்களில் மூன்றாவது கருத்து உறுதிப்படுத்துகின்றது. இந்த கருத்தை இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஸஈதுப்னுல் முஸய்யப், முஜாஹித், அப்துல்லாஹ் பின் புரைதா, இக்ரிமா, ஸஈதுப்னு ஜுபைர், அதாஃ பின் அபீ ரபாஹ், அதிய்யதுல் அவ்பீ, ளஹ்ஹாக், ஸுத்தீ போன்றவர்கள் கூறினார்கள். என்று இப்னு கஸீர், இப்னு ஜரீர் போன்றவர்கள் பதிவுசெய்தனர்.  (அல்வாஉல் பயான் 6:14 வசன விளக்கம்)

எனவே இந்த விளக்கங்களை வைத்து ‘அல்லாஹ் அவனே தேவைகள், கஷ்டங்களின்போது வேண்டப்படுகின்ற ஒரே தலைவன், அவனோ உண்ணுதல், பருகுதல் போன்ற படைப்பினங்களின் பண்புகளிலிருந்து  தூய்மையானவன்.’ என்பதை புரிந்துகொள்ளலாம். 

படைப்பினங்ககளுக்கு உள்ள தேவைகள் இருப்பவன் கடவுளாக இருக்க முடியாது என்பது அல்லாஹ் தெளிவாக கூறும் விடயமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

என்று கூறினார்கள்.  (அல்வாஉல் பயான்)

அடுத்து கிறிஸ்தவர்கள் மஸீஹ் ஈஸா நபியையும், யூதர்கள் உஸைரைரையும் அல்லாஹ்வின் பிள்ளைகள் என்றனர், இணைவைப்பாளர்கள் வானவர்களை அல்லாஹ்வின் பெண்பிள்ளைகள் என்றனர் இவர்களுக்கெல்லாம் மறுப்பாகவே இந்த ஸூரா இருக்கின்றது.

படைத்தவன் அல்லாஹ்வுக்கு பெற்றோரை மனித சமூகம் கற்பிக்கவில்லை, அதுவே அறிவுப்பூர்வமானதும் கூட, ஏனெனில் படைத்தவனுக்கு பெற்றோரை தேடினால் பெற்றோரை பெற்றவர்கள் யார் என்று சங்கிலித்தொடராக பெற்றோரையும், படைத்தவனையும் தேடுவதே மனிதனின் பணியாகிவிடும். அதற்கு பதில் காணவே முடியாது. அப்படி யோசிப்பதே மனிதனை வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சி என்று நபியவர்களும் எச்சரித்தார்கள். அல்லாஹ் அந்த சூழ்ச்சியிலிருந்து நம்மை காப்பானாக.

அல்லாஹ் கூறுகின்றான்:

இமாம் முஜாஹித் அவர்கள், {وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏} என்ற வசனத்திற்கு விளக்கமாக அல்லாஹ்வுக்கு மனைவியும் இல்லை என்றார்கள், (இப்னு கஸீர்) அது அல்குர்ஆனின் பல வசனங்ககள் மூலம் விளக்கப்பட்ட ஒன்றே. அல்லாஹ் கூறுகின்றான்:

அறிஞர் ஷன்கீதி அவர்கள் இந்த ஸூராவின் சிறப்பு சம்பந்தமாக கூறும் போது ஒரு குறிப்பைக் கூறினார்கள். அது என்னவெனில்; “

அல்லாஹ் தனக்கு பிள்ளையை ‘எடுத்துக்கொள்ளவில்லை’ என்பதிலிருந்து ‘பெறவில்லை’ என்பது கட்டாயமாகாது, ஏனெனில் பிள்ளையை எடுத்துக்கொள்ளுதல் என்பது சிலவேளை தத்ததெடுப்பதன் மூலமும் வேறுவிதத்திலும் ஏற்படலாம், ஸூரா யூஸுபில் அல்லாஹ் கூறுவதை போன்று.

ஆனால் இந்த ஸூராவில் (பெறவில்லை என்பதை) குறிப்பிட்டு மறுத்தல் இருக்கின்றது. அதனை தெளிவாக புரிவது அவசியம். அதுவே “அல்லாஹ்வை தூய்மையாக்கும் இக்லாஸ் ஸூராவாகும், அதுவே அல்லாஹ்வை அவனது தாத்திலும், பண்புகளிலும், ஓர்மைப்படுத்தி, அனைத்தைவிட்டும் தேவையற்ற ஒருவன் என்பதையும் குறிப்பாக்கி, பெற்றெடுத்தலையும், பிள்ளையையும் மறுத்து, நிகர் இருப்பதையும் நிராகரித்து அவனின் உரிமையை அவனுக்கே குறிப்பாகும்,  அல்குர்ஆனின் மூன்றில் ஒன்றுக்கு நிகரானது என்ற சிறப்பு பெற்ற ஸூரா இது” என்பதாகும். (அல்வாஉல் பயான்)

இந்த வசனம் மூலம் அல்லாஹ்வின் விடயத்தில் மறுக்கப்பட்ட ஒப்புவமை, பல வசனங்களில் பல வார்த்தைகள் மூலம் மறுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சூராவின் மூலம், நாம் அல்லாஹ்வைப் பற்றி ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்ததையே பேசவேண்டும், அல்லாஹ்வின் விடயத்தில் எது தெரியாதோ அதனை பேசாமல் இருப்பதே ஒரு முஃமினுக்கு நல்லது என்பதை அறியலாம். அல்லாஹ் கூறுகின்றான்:

இத்தோடு ஸூரா இக்லாஸின் விளக்கம் முற்றுப்பெறும்.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *