سورَة الْمَاعُونُ

ஸூரதுல் மாஊன்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!

பெயர் : ஸூரதுல் மாஊன் (அற்ப உதவிப் பொருள்)

இறங்கிய காலப்பகுதி: மக்கீ

வசனங்கள்: 7

இந்த வசனத்தில் அல்லாஹ் கேள்வி கேட்கும் தோரணையில் கண்டிக்கவும், உணர்த்தவுமே செய்கிறான்.

‘الدِّيْنِ‏ அத்தீன்’ என்பதைக் கொண்டு மறுமையும், அதில் கொடுக்கப்படும் கூலியுமே நாடப்படுகின்றது, ஏனெனில் மக்கத்து இணைவைப்பாளர்கள் மரணத்தின் பின்னரான மறுமை வாழ்க்கையையே மறுத்தனர். அதனால் அவர்கள் பல நலவுகளை தவறவிட்டதோடு, பல கெடுதிகளையும் செய்தனர். அதற்கு உதாரணமாகவே இரண்டு விடயங்களை பின்னால் கூறுகின்றான்.

மறுமை வாழ்க்கையை மறுத்தவன், மறந்தவன் பல நலவுகளை இழப்பது போன்று, அந்த நம்பிக்கையுள்ளவன் நல்லவற்றை செய்வதில் போட்டிபோடுவான் என்பதும் அல்குர்ஆன் கற்றுத்தரும் விடயமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

இப்படி கூறிய அல்லாஹ் அதற்கான காரணத்தை பின்வருமாறு கூறுகின்றான்:

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு கீழால், ‘மறுமையைப் பொய்ப்பிப்பவனுக்கு ஏன் இந்த இரண்டு விடயங்கள் மட்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன?’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டால், ‘அந்த இரண்டும் உதாரணங்கள் மட்டுமே, ஒன்று; மோசமான செயலை செய்ததற்கும், இரண்டாவது, (நல்லதை விடும்) கீழ்த்தரமான தவிர்ப்புக்குமாகும்.’ என்பதே பதிலாகும். மேலும் ‘அனைத்துக்கும் முன்னர் அவ்விரண்டும் இஸ்லாமிய விடயங்கள் இல்லையென்று வைத்துக்கொண்டாலும், மனிதநேயமான காரியங்களாகும்.’ என்று தெளிவு படுத்தியுள்ளார்கள்.  (அல்வாஉல் பயான்)

அனாதைகளை விரட்டுதல் எனும்போது அவர்களுக்கு எதிராக செய்யப்படும் அனைத்தும் அந்த குற்றத்தில் ஆக்கிவிடும். அவர்களை கேவலப்படுத்துவது, அவர்களது சொத்துக்களை சூறையாடுவது, அழிப்பது போன்ற அனைத்தும் அடங்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நரகவாசிகளின், இறைமறுப்பாளர்களின் அடையாளமாக ‘உணவளிப்பதை தூண்டமாட்டார்கள்’ என்று பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. (69:34) (74:44)

எனவே நல்லவர்களின் அடையாளமான இந்த நல்ல பண்புகள் இல்லாமல் செல்வதற்கு மறுமை நம்பிக்கை இல்லாமலிருப்பதும், குறைந்து போவதுமே காரணமாகும்.

இந்த வசனம் மூலம் எச்சரிக்கப்படும் தொழுகையாளிகள் யார் என்று அறிஞர்கள் இரண்டு கருத்தை கூறியுள்ளார்கள்; பெரும்பாண்மையானவர்கள், ‘அவர்கள் பொடுபோக்கு செய்பவர்கள், பேணித் தொழாதவர்கள்‘ என்று கூறினார், சிலர் ‘தொழுகையில் இறையச்சம், இறை சிந்தனை இல்லாதவர்கள்‘ என்று கூறினார். இந்த இரண்டு கருத்துக்களையும் பதிந்த ஷன்கீதி இமாமவர்கள் முதல் கருத்தே ஏற்றமானது என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)

இப்னு அப்பாஸ் ரலி, அதாஃ ரஹ் ஆகியோர்; ‘தொழுகைக்குள் கவனக்குறைவாக இருப்போர் என்று கூறாமல் தொழுகை விடயத்தில் பொடுபோக்கு செய்வோர்’ என்று கூறிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், ஏனெனில் தொழுகையில் மறப்பதிலிருந்து யாருமே தப்பவில்லை, நபியவர்கள் கூட ஒரு நாள் ளுஹரை இரண்டோடு முடிக்க, துல்யாதைன் ரலி அவர்களே நினைவூட்டினார்கள். (அல்வாஉல் பயான்)

இதன் காரணமாகவே “தங்கள் தொழுகையில் பொடுபோக்கு செய்வோர்” யார் என்பதில் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

சிலர் ‘அவர்கள் குறிப்பிட்ட சில நபர்கள்‘ என்றும், சிலர் ‘அவர்கள் நேரம் தாழ்த்தி தொழும் ஒவ்வொருவரும், அல்லது ஜமாஅத்தோடு மஸ்ஜித்களில் தொழாதவர்கள்.’ என்றும், சிலர், ‘நயவஞ்சகர்கள்‘ என்றும் கூறினார்.

அதேநேரம் அடுத்த வசனங்களில் அவர்களது பண்புகள் ‘அவர்கள் காட்டுவதற்காக தொழுவார்கள், அற்ப உதவி பொருட்களை தடுத்துக்கொள்வார்கள்‘ என்று தெளிவாக வந்துள்ளது, எனவே தொழுகையில் அடுத்தவர்களுக்கு காட்டுவதென்பது அவர்கள் நயவஞ்சகர்களாகவோ, வேறு யாராகவும் இருக்கலாம்.

பிறருக்கு காட்டுதல் (முகஸ்துதி) என்பது ஒரு விதத்தில் பொதுவானதாகவும், நயவஞ்சகத்தனம் என்பது ஒரு விதத்தில் பொதுவானதாகவும் இருக்கலாம், என்றால்; ஒருவன் மறுமையையும், கூலியையும், ஈமானின் அடிப்படைகளையும் நம்பிய நிலையில் ஒரு செயலை செய்யும்போது பிறருக்கு காட்டும் நோக்கில் செய்யலாம், வேறொரு செயலை செய்யம்போது முகஸ்துதி இல்லாமல் முழுமையான மனத்தூய்மையோடு செய்யலாம்.  ஆனால் முனாபிக் எனும் நயவஞ்சகன் எப்போதுமே அவனது வெளித்தோற்றம் உள்ரங்கத்திற்கு மாற்றமானதே, தொழுகையில் மட்டுமல்ல. அதேநேரம், பிறருக்கு காட்டுவதற்காக தொழுதல் என்பது நயவஞ்சகனின் அடையாளமாக குர்அனிலே வந்திருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

அதே போன்று அற்ப உதவிப்பொருட்களை கொடுக்காமல் தடுப்பதும் தொழுகையாளிகள் அல்லாதவர்களின் பண்பு என்று அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.

இந்த வசனத்திற்கு விளக்கம் கூறிய இமாம் இப்னு கஸீர் இமாமவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: இப்னு அப்பாஸ் ரலி அவர்களும் மற்றவர்களும், ‘உள்ளத்தளவில் இல்லாமல் வெளித்தோற்றத்தில் தொழுவதுபோன்று காட்டும் நயவஞ்சகர்களே நாடப்படுகின்றனர், அதனால் தான் ‘லில்முஸல்லீன், தொழுகையாளிகளுக்கு’ என்று கூறியுள்ளான். தொழுகையாளிகள் என்றால்; அவர்கள் தொழுகையாளிகள் தான், பிறகு அதில் பாராமுகமாக இருந்தார்கள், ஒன்றில் இப்னு அப்பாஸ் ரலி கூறியதுபோன்று  முழுவதுமாக விட்டுவிடல், அல்லது மஸ்ரரூக், அபுல் ளுஹா போன்றவர்கள் கூறியதுபோன்று இஸ்லாம் குறிப்பிட்ட நேரத்தை விட்டும் மொத்தமாக பிற்படுத்தல், அல்லது, வளமையாகவே ஆரம்ப நேரத்தைவிட்டும் பிற்படுத்துவது, அல்லது இஸ்லாம் காட்டித்தந்த முறையில் தொழாமல் நிபந்தனைகள், கடமைகளை நிறைவேற்றாமை, அல்லது உள்ளச்சமின்றி, அதன் உணர்வின்றி தொழுதல். இவை அனைத்தையும் அந்த எச்சரிக்கை சேர்த்துக்கொள்ளும். ஆனாலும், இவற்றில் ஒரு விடயத்தை தன்னிடம் வைத்திருப்பவர் இந்த வசனத்தின் எச்சிரிக்கையின் ஒரு பங்கை ஏற்கிறார், அனைத்தையும் தன்னிடம் கொண்டிருந்தால் அவர் இந்த வசன எச்சரிக்கைக்குள் பூரணமாக நுழைந்துவிடுவார். அவர் செயல் அடிப்படையிலான நயவஞ்சகத்தனத்தை பூரணப்படுத்திக்கொள்வார்.

இது நடுத் தொழுகை என்று சிறப்பித்துக்கூறப்பட்ட அஸ்ர் தொழுகையின் கடைசி நேரமாகும், அது தொழுவதற்கு வெறுப்பான நேரமாகும், அந்த நேரத்தில் காக்காய் கொத்துவது போன்று இறை அச்சமோ, அமைதியோ இல்லாமல் வேகமாக தொழுவது, அல்லாஹ்வை கொஞ்சமாகவே அன்றி நினைவூட்டுவதுமில்லை, இப்படி செய்வதற்கு காரணமாக இருந்தது அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்க்காமல், மக்களுக்கு காட்டுவதற்காக தொழுதமையே.  எனவே அவர் மொத்தமாக தொழாதவரே. (இப்னு கஸீர்)

மொத்தமாக விடுவது இறைமறுப்புக்கு இட்டுச்செல்லும், நரகில் வீழ்த்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது;

எனவே மொத்தமாக தொழுகையை விட்டவர்கள் மறுமை நிலை இப்படியிருக்கும்.

பாரமாக இருப்பதே நயவஞ்சகத்தின் அடையாளம் என்றால் விடுவது எவ்வளவு மோசமானது?

நாம் முஸ்லிம்கள் எங்களது எத்தனை தொழுகைகளை எமது (படம், நாடகம், வீண் விளையாட்டு, இன்னுமுள்ள பராக்குகள்) செயல்கள் பாழாக்கிவிட்டன. எமது நிலை எப்படியிருக்குமோ என்றே சிந்திக்கவேண்டும்.

இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகையாளி நரகம் நுழைவதற்கு ஒருகாரணி பிறருக்கு காட்டுவதற்காக தொழுவதாகும்.

தொழுதும் நரகில் நுழையும் மிக மோசமான நிலையை இந்த முகஸ்துதி ஏற்படுத்தும் என்றால் இது எவ்வளவு மோசமான குணம் என்பதை புரிந்து கொள்ளலாம், இதுவும் நயவஞ்சகர்களின் இயல்புக் குணமாக இருந்துள்ளது, முஸ்லிம்களுக்குள் ஷைத்தான் ஏற்படுத்திவிடுகின்றான், அதன் மூலம் நன்மைகளை அளிப்பதற்காக.

அடியார்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை; ‘அவனுக்கு நிகர் சேர்க்காமல், அவனை மட்டும் வணங்க வேண்டும்’ என்பதே. அல்லாஹ் கூறுகின்றான்:

அடுத்து பிறருக்கு காட்டுவதற்காக செய்தவர்களை போன்று இருக்க வேண்டாம் எனவும் கூறுகின்றான்.

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமாக பின்வருமாறு கூறினார்கள்:

மாஊன் என்றால், சிலர் இருப்பதில் கொஞ்சம் என்ற அடிப்படையில் ‘ஸகாத்’ என்றனர், மாஊன் என்பதும் கொஞ்சம்தான். குறைஷிகளின் மொழியில் மாஊன் என்றால் ‘செல்வம்’ என்பதாகும், இன்னும் சிலர்; அது வேலைக்கு பயன்படும் ‘வாலி,கோடாரி,ஊசி,சட்டி போன்றவற்றைக் குறிக்கும்’ என்றனர்.

தொழுகையில் பொடுபோக்கு செய்வது ‘வாலி, கோடாரி போன்ற வேலை முடிந்தால் திரும்ப ஒப்படைக்கப்படும் அற்ப உதவிப் பொருள்களையே கொடுக்கவிடாமல் தடுக்கும் என்றால், தர்மம், ஸகாத் போன்றவற்றை தடுப்பது என்பது சாதாரணத்திலும் சாதாரணமாகும்.

இங்கிருந்து புரிந்துகொள்ள முடிந்தது; ‘நயவஞ்சகன் என்பவன் தன் செல்வத்திலிருந்து கடமையான ஸகாத்தோ, தேவையுள்ளவனுக்கு தர்மமோ செய்வதொருபக்கம், மற்றவர்களுக்கு அழகிய கடனும் கொடுக்கமாட்டான்.’ என்பதே, அதனால்தான் அவர்களுக்கு மத்தியில் வட்டி அதிக அளவில் பரவியிருக்கின்றது. (அல்வாஉல் பயான்)

இந்த செயற்பாடுகள் நல்லது என்பதனாலேயே தொழுதும், இந்த பண்பு இல்லாதவர் நரகைக் கொண்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்.

நவவி இமாமவர்கள் ‘தனக்கு தேவைப்படாத ஆடையை இரவலாக கொடுப்பார்’ என்று கூறினார்கள்.

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் முக்கிய ஒரு குறிப்பை சுட்டிக்காட்டினார்கள் :

இந்த ஸூராவில் தொழக்கூடியவர்களுக்கு கேடுதான் என்ற வசனத்திற்கும், ஸூரதுல் முஃமினூன்:9 வது வசனம் அவர்கள் தங்களது தொழுகையை பேணிப்பாதுகாப்பார்கள் என்ற வசனத்திற்கும் இடையில் முக்கிய விடயம் ஒன்று இருக்கின்றது; முதலாவது, நயவஞ்சகனின் தன்மை, தொழுகையில் பொடுபோக்கு, இரண்டாவது, முஃமினின் தன்மை தொழுகையில் கவனம் செலுத்துவது. என்றால் முஃமின் எனும் நல்லவர்களுக்கும், நயவஞ்சகன் எனும் கெட்டவர்களுக்கும் இடையிலுள்ள அளவுகோல் தொழுகை என்பதே என்பதாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் தொழுகை என்பது தனிமனித, சமூக வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும், அது சொல்லிமுடிக்க முடியாதது.

தொழுகை என்பது ஈருலகிலும் நலவுகளை கொண்டுவரும், குர்ஆன் அதனை தெளிவுபடுத்துகின்றது.

உலகில் ஏற்படும் மாற்றம் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

மானக்கேடானவற்றில் உள்ளதுதான்: அநாதையை விரட்டுவது, ஏழைகளுக்கு உணவளிக்காமலிருப்பது. அவை முதல் தரத்திலுள்ளதாகும். கீழ்த்தரமான பாவம் ஒவ்வொன்றும் அதில் உள்ளதே. தொழுகை என்பது,  அல்லாஹ் ‘தொழுகையைக்கொண்டும், பொறுமையைக் கொண்டும் உதவிதேடுங்கள்’ என்று சொல்வதை போன்று அனைத்து கீழ்த்தரமான செயலிலிருந்தும் பாதுகாக்கும்,

மேலும் மறுமையில் அது ஒளியாக இருக்கும், அல்லாஹ் கூறுகின்றான்:

(அல்வாஉல் பயான்)

இதன் மூலம் இமாமவர்கள் தொழுகையாளிகள் தொழுகையால் அடையும் நலவையும், தொழுகையில் பொடுபோக்கு செய்யும் நயவஞ்சகர்களிடம் குடிகொள்ளும் தீய குணங்களையும் சுட்டிக்காட்டுகின்றார்கள். எனவே நாம் தொழுகையாளிகள் என்றால் எந்த நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை சிந்தித்தால் தொழுகையை சீர்திருத்தி நல்லவர்களாக வாழலாம்.

எனவே ஸூரா மாஊனில் படித்த பாடங்களை எமது வாழ்விலும் கடைபிடித்து நடக்க முயல்வோம்.

இத்தோடு ஸூரா மாஊன் விளக்கம் முடிவுற்றது.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *