سُورَةُ قُرَيْشٍ   

ஸூரா குறைஷ்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!

பெயர் : ஸூரா குறைஷ் (குறைஷி கோத்திரம்)

இறங்கிய காலப்பகுதி : மக்கா

வசனங்கள் : 4

இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘இப்ராஹீமுப்னு முஹம்மத் பின் ஸாபித் பின் ஷுரைஹ்பீல்‘ என்பர் இடம்பெற்றுள்ளார், அவர் ‘பல முன்கரான செய்திகளை அறிவித்தவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார், மேலும், ‘யஃகூப் பின் முஹம்மதுஸ் ஸுஹ்ரீ‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் ‘அதிகம் தவறு விடுபவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே பலவீனமானதாகும். இமாம் தஹபீ அவர்கள் பலவீனப்படுத்தியதோடு, ஹாபிழ் இராகீ, அல்பானி போன்றவர்கள் ஹஸன் என்று கூறியுள்ளனர். (அல்லாஹு அஃலம்)

இந்த ஸூரா முன்னைய ஸூராவிலிருந்து வேறுபடுத்தப்பட்டதாகவே இருக்கின்றது, இரண்டும் ஒரே பொருளுக்கு தொடர்புடையவையாக இருந்தாலும் அவற்றிற்கிடையில் “பிஸ்மில்லாஹ்” எழுதப்பட்டுள்ளது. இதை முஹம்மத் பின் இஸ்ஹாக் மற்றும் அப்துர் ரஹ்மானிப்னு ஸைதிப்னு அஸ்லம் ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்களுடைய கூற்றுப்படி, “குரைஷ் இனத்தினரை மெருகுதலூட்டுவதற்காக நாங்கள் மக்காவுக்கு எதிராக வந்த யானைப் பட்டையை அழித்து, சருகுகளாக ஆக்கினோம்” என்பதாகும்.

இன்னுமொரு கருத்தின்படி, இதன் பொருள், “குரைஷ் இனத்தினர் வியாபார நோக்கில் மாரிகாலத்தில் யமனை நோக்கியும், கோடைகாலத்தில் ஷாமை நோக்கியும் பயணிப்பதில் அவர்களுக்கிருந்த மனதிருப்தியை நினைவூட்டுவதாகும், அவர்கள் பயணங்களில் சென்று, திரும்பும் போது தங்களின் நாட்டுக்கு பாதுகாப்பாக திரும்புவார்கள். இது அவர்கள் சங்கையான ஊரான மக்காவின் குடியினராக இருந்த காரணத்தால் கிடைத்த சிறப்பு. அவர்களை அறிந்தவர்கள் அவர்களை மதித்தனர், அவர்களுடன் பயணித்தவர்களும் பாதுகாப்பாக இருந்தனர், அவர்கள் பயணங்களிலும், தங்கள் ஊரில் தங்கியிருந்தாலும் பாதுகாப்பாக இருந்தனர், அல்லாஹ் கூறுகின்றான்:

(இப்னு கஸீர்)

இந்த கருத்தின்படி “அவர்களை விருப்பமூட்டுவதற்காக என்பதன் மூலம் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள வைத்து அவனையே வணங்க வைத்தல்” ஆகும். (அல்வாஉல் பயான்)

இப்னு ஜரீர் இமாம் அவர்கள் கூறும் போது: “லாம்” என்ற எழுத்து ஆச்சரியத்தைக் குறிப்பதற்காக வந்துள்ளது, அதாவது, “குரைஷிகளுக்கு உளதிருப்தி ஏற்படுத்தியதையும்  அவர்களுக்கு நாம் செய்த அருளையும் வைத்து ஆச்சரியப்படுங்கள்” என்பது பொருள்’, அது இந்த இரண்டு ஸூராக்களும் தனித்துவமானவை என்று முஸ்லிம்கள்  ஒரே கருத்தில் ஒன்றுபட்டிருக்கின்றார்கள்’ என்பதனாலாகும்” என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும்போது,; ‘இந்த இரண்டு ஸூராக்களையும் ஒரே ரக்அத்தில் உமர் ரலி அவர்கள் ஓதியதை வைத்தும், உபையிப்னு கஃப் ரலி அவர்களிடத்தில் அவ்விரண்டுக்குமிடையில் பிரிக்கப்படவில்லை‘ என்பதை வைத்தும் ஒரே ஸூராவாக பார்த்தவர்கள் ஆதாரம் பிடித்தனர். இமாம் குர்துபீ அவர்கள் இரண்டு கருத்துக்களையும் கூறிவிட்டு, ஒரு கருத்தை முற்படுத்தவில்லை, ஏனெனில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகளில்லை. இமாம் ஷன்கீதி அவர்கள் இந்த இரண்டு கருத்துக்களும் பொருத்தமானது என்பதையே சரிகண்டுவிட்டு, ‘அதனால் தான் இப்னு ஜரீர் அவர்களைத் தவிர வேறு யாரும் இரண்டில் ஒன்றை முற்படுத்தவில்லை, இரண்டும் சரி என்பதே பொருத்தமானது’ என்று கூறினார்கள்.  (அல்வாஉல் பயான்)

இந்த வசனத்தில் வீடு என்பதைக் கொண்டு அல்லாஹ்வின் கஃபா எனும் ஆலயமான வீடே நாட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அதுவே கோடைகால, மாரிகால பயணம் விருப்பமாக்கப்பட்ட குறைஷிகளுக்கு, மக்காவாசிகளுக்கு பழகிப்போன ஆலையம். அல்லாஹ் கூறுகின்றான்:

அந்த பயணத்தின் முலமே பசிக்கு உணவை பெற்றுக்கொள்வதும், சுற்றி வாழ்ந்த மக்களிடம் நன்மதிப்பு கிடைப்பதும் இலகுவானது, இந்த செல்வாக்கை கொடுத்தவன் அல்லாஹ் என்பதனால் நன்றி செலுத்தும் முகமாக அவனை மட்டும் வணங்குவது  அவர்களுக்கு ஏவப்பட்டது.

இமாம் இப்னு கஸீர் இமாமவர்கள் கூறும்போது, மக்காவாசிகளுக்கு கட்டளையிட்டது போன்றே நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று பின்வரும் வசனத்தை ஆதாரம் பிடித்து கூறினார்கள். அல்லாஹ் கூறினான்:

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் சில குறிப்புகளை முன்வைத்தார்கள்;

‘அவர்களுக்கு உணவளித்து, பயத்திலிருந்து அபயமளித்த கஃபாவின் இரட்சகனை வணங்கட்டும்’ என்ற வசனம் மூலம், காரணத்தையும், அதனை ஏற்படுத்தியவனையும் இணைப்பது போன்று ஒரு அருளையும் அதனை விதித்தவனையும் இந்த வசனம் சேர்த்துள்ளது. எனவே அதன் மூலம் அல்லாஹ்வை மட்டும் வணங்கவேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, அது குறைஷிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து அடியார்களுக்குமுள்ள கட்டளையாகும்.

முதலாவது; இது அல்குர்ஆனின் முதல் சூராவின் அழைப்பாகும்; அல்லாஹ் கூறுகின்றான்:

இது அல்லாஹ்வே புகழுக்கு தகுதியானவன், ஏனெனில் அவனே அகிலத்தவர்கள் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவன் என்று கூறியது போன்றாகும்.

இரண்டாவது: இரண்டாவது அத்தியாயம் (2:21,22) வது வசனங்களை போன்றதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

இதனை கட்டாயப்படுத்தும் காரணி;

அதன் பிறகு அவன் செய்த அருள்களை எடுத்துக்காட்டுகிறான். அல்லாஹ் கூறுகின்றான்;

இது போன்றது தான் பின்வரும் வசனமும்; அல்லாஹ் கூறுகின்றான்:

இதனைத்தான் அல்லாஹ், நன்றி செலுத்தல் என்பது நிஃமத்துக்களை அதிகப்படுத்தும் என்று கூறுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:

நன்றி மறுத்தால், அதன் விபரீதம் கடுமையானது என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்:

எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தல் என்பதும், நன்றி மறந்து வாழும் விடயத்தில் எச்சரிக்கையாக இருத்தல் என்பதும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.

அடுத்து ஒரு குறிப்பு:

பசிக்கு உணவளித்தல், பயத்துக்கு அபயமளித்தல் என்ற இரண்டும் ஒன்றாக கிடைப்பதும் பெரும் அருளாகும். ஏனெனில் இந்த இரண்டில் ஒன்றை இழந்தாலும் மனிதன் நிம்மதியை இழந்து விடுவான். ஏனெனில் பட்டினியுடன் வாழமுடியாது, பயமிருந்தால் பாதுகாப்பில்லை, இந்த இரண்டும் சேர்ந்து கிடைப்பதே அருளை பூர்த்தியாகும்.

இதனை அல்பானி இமாமவர்கள் ஹசன் தரத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்கள். ஆனாலும் இதில் ‘ஸலமதுப்னு உபைதுல்லாஹ்‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் மஜ்ஹூல்‘ என்று விமர்சிக்கப்பட்டவராவார். (துரர்)

இதே நபி மொழி இப்னு உமர் ரலி வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது, அது பலவீனமாகும், அதில் ‘அலிய்யுப்னு ஆபிஸ்‘ எனும், ‘பலவீனமானவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளவர் இடம்பெற்றுள்ளார். மேலும் அபூ ஹுரைரா ரலி வழியாகவும் பலவீனமான வழியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அபுத்தர்தாஃ ரலி வழியாக (இப்னு ஹிப்பான்: 671) அறிவிக்கப்பட்டுள்து, இமாம் தஹபீ அவர்கள், அதில் வரும் ‘ஹானிஃ என்பவரது நிலை எனக்குத் தெரியாது’ என்று கூறியுள்ளார்கள். ஷுஐபுல் அர்னாவுத் அவர்களும் மிகவும் பலவீனமானதுஅப்துல்லாஹிப்னு ஹானிஃ பல பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார்‘ என்று கூறியுள்ளார்கள். (அல்லாஹு அஃலம்)

மேலும் ஒரு குறிப்பை கூறினார்கள்:

“இந்த ஸூரா நபிமார்களின் துஆ ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என்பதற்கு ஒரு ஆதாரமாகும். ஏனெனில் இப்ராஹீம் நபியவர்கள், மக்கா வாசிகளுக்கு “அவர்கள் பக்கம் ஒதுங்கும் ஒரு சாராரை மனிதர்களிலிருந்து நீ ஆக்கிவிடுவாயாக, அவர்களுக்கு பழவஸ்துக்களை உணவாகவும் அளிப்பாயாக‘ என்றும், இறைவா அவர்களில் இருந்தே அவர்களுக்கு ஒரு தூதரை அனுப்புவாயாக‘ என்றும் பிரார்த்தித்தார்கள், அல்லாஹ் அவர்களுக்கு பசியிலிருந்து உணவும் அளித்தான், நபியையும் அனுப்பினான்.”  (அல்வாஉல் பயான்)

இந்த ஸூராவில் இருந்து நாம் படித்த பாடங்களை எம் வாழ்வில் எடுத்து நடக்க முயல்வோம்! இத்தோடு ஸூரா குரைஷின் விளக்கம் முடிவுற்றது.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *