ஸூரதுன் நிஸா விளக்கம்- பகுதி 2

سُورَةُ النِّسَاءِ

ஸூரதுன் நிஸா

(வசனங்கள் 15-23)

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!

ஒரு பெண்மணி விபச்சாரம் செய்துவிட்டால் நான்கு சாட்சிகள் கொண்டு நிரூபிக்கப்படவேண்டும்,

அப்படி நிரூபிக்கப்பட்டால் அவளுக்கான தண்டனை அவள் மரணிக்கும் வரை, அல்லது அவளுக்கான வேறு ஒரு வழியை சட்டத்தை அல்லாஹ் ஆக்கும் வரை அவள் வீட்டிற்குள்ளேயே தடுத்துவைக்கப்பட வேண்டும், வெளியேற்றப்படக்கூடாது.

இந்த வசனத்தின் கடைசிப்பகுதி (சபீலா ஒரு வழி என்ற வார்த்தை)  அதனையே எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் விபச்சாரம் செய்தவருக்குரிய தண்டனையை குறித்து சட்டத்தை இறக்கியுள்ளான்.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: ஸூரதுன் நூர் இறங்கும் வரை விபச்சாரம் செய்தோருக்கான சட்டம் இவ்வாறே இருந்தது. பிறகு அந்த சட்டம் (நூறு) கசையடி, அல்லது கல்லடித்தல் என்பதைக் கொண்டு மாற்றபட்டது. (இப்னு கஸீர்)

இதே கருத்து (இந்த சட்டம் மாற்றப்பட்டது, மன்ஸூக்) இக்ரிமா, ஸஈத் பின் ஜுபைர், ஹஸனுல் பஸரி, அதாஉல் குராஸானி, கதாதா, ளஹ்ஹாக் போன்றவர்கள் வழியாகவும் பதியப்பட்டுள்ளது. இது ஏகோபித்துக் கூறப்பட்ட ஒன்றாகும். (இப்னு கஸீர்)

திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு கசையடியும், ஒரு வருடகாலம் நாடுகடத்தலும், திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் ஈடுபடடால் நூறு கசையடியும், கல்லெறிந்து கொள்வதும், வயோதிபர்கள் ஈடுபடடால் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என்று இப்னு மர்தவைஹி அவர்கள் வழியாக பதியப்பட்டுள்ளது, அதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அம்ர் பின் அப்தில் கப்பாருல் பகீமி’ என்பவர் இடம் பெற்றுள்ளார், அவர் ‘மத்ரூக்குல் ஹதீஸ், முன்கருல் ஹதீஸ், ஹதீஸ் புனைபவர்‘ போன்ற வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டுள்ளார். (மீஸானுல் இஃதிதால்)

ஸூரதுன் நிஸா இறங்கிய பின்னர் பெண்களை தடுத்துவைத்தல் என்ற சட்டமில்லை’ என்று நபிகளாரின் கூற்றாக தப்ரானியில் ஒரு செய்தி பதியப்பட்டுள்ளது, அதன் அறிவிப்பாளர் தொடரில் வரும். ‘இப்னு லஹீஆ, அவரது சகோதரர் ஈஸா’ பலவீனமானவர்களாவர்.

இந்த நபிமொழிகளை வைத்தே அஹ்மத் இமாமவர்கள் திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தால் கசையடியும், கல்லெறிதலும் அவசியம்என்று கூறினார்கள், ஏனைய அறிஞர்கள் ‘கல்லெறிந்தால் மட்டும் போதுமானது, ஏனெனில் நபியவர்கள், மாஇஸ், காமிதிய்யா, இரண்டு யூதர்களுக்கு கசையடி நிறைவேற்றவில்லை, எனவே அது அவசியமில்லை, அது மாற்றப்பட்டதுஎன்று கூறினார்கள். (இப்னு கஸீர்) அல்லாஹு அஃலம்!

இப்னு அப்பாஸ் ரலி, ஸஈத் பின் ஜுபைர் போன்றவர்கள் கூறினார்கள்: ஏசுவது, பலிப்பது, செருப்பால் அடிப்பது கொண்டு நோவினை செய்யுங்கள், அதுவே கசையடி, கல்லெறிதல் என்ற சட்டம் கொண்டு மாற்றப்படும் வரை சட்டமாக இருந்தது.

இக்ரிமா, அதாஃ, ஹஸனுல் பஸரீ, அப்துல்லாஹ் பின் கஸீர் போன்றவர்கள் கூறினர்; இந்த வசனம் விபச்சாரம் செய்த ஆண் பெண் விடயத்தில் இறங்கியதாகும், இமாம் ஸுத்தீ அவர்கள் கூறினார்கள்; இது திருமணம் முடிக்காத இளைஞர்கள் விடயத்தில் இறங்கியது.

இமாம் முஜாஹித் அவர்கள் கூறினாரக்ள்; இது இரண்டு ஆண்கள் ஒன்று சேர்வதில் இறங்கியது. அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை, அவர் ஓரினைச் சேர்க்கையை நாடுவது போன்று இருக்கின்றது. (இப்னு கஸீர்) அல்லாஹு அஃலம்.

அஹ்மதின் அறிவிப்பில் ‘இப்ராஹீம் பின் இஸ்மாஈல் பின் அபீ ஹபீபதில் அன்ஸாரி ‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் ‘முன்கருல் ஹதீஸ், மத்ரூக், அறிவிப்பாளர் தொடர்களை மாற்றுபவர்‘ என்று விமர்சிக்கப்பட்டவர். மேலும் அவரின் ஆசான்; ‘தாவூத் பின் ஹுஸைன்‘ என்பவர் ‘இக்ரிமாவைத் தொட்டும் அறிவிப்பதில் நம்பிக்கையற்றவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இது இக்ரிமாவின் அறிவிப்பாகும்.
மேலும் ‘அம்ர் பின் அபீ அம்ர் மவ்லா முத்தலிப்‘ என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ‘ஸதூக்‘ என்ற நிலையில் இருந்தாலும் இந்த ஹதீஸ் விடயத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளார். ‘இக்ரிமாவைத்தொட்டு முன்கரான செய்திகளை அறிவிப்பு செய்பவர், அவர் எந்த அறிவிப்பிலும் இக்ரிமாவிடமிருந்து செவிமடுத்ததாக கூறவில்லை‘ என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார். தல்கீஸுல் ஹபீரில் அல்ஹாபிழ் அவர்கள், நஸாஈ அவர்களும் நிராகரித்துள்ளதாக பதிவுசெய்துள்ளார்.

விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் அதிலிருந்து விடுபட்டு, தவ்பா செய்து, நல்லநிலையில் இருந்தால் அவ்விருவரையும் மோசமான வார்த்தைகளால் நோவினை செய்யக்கூடாது என்று இந்த வசனம் கூறுகின்றது, ஏனெனில் தவ்பா செய்தவர் பாவமற்றவராகவே கருதப்படுவார்.

அடுத்து அல்லாஹ் இந்த வசனத்தை முடிக்கும் விதம்,

அல்லாஹ்வே அடியான் செய்த தவறுகளை மன்னித்து, அன்புகாட்டும் போது ஏன் மனிதனாகிய நாம் ஒரு மனிதனை மன்னிக்கக்கூடாது, இதை உணர்த்துவதே இந்த வசன முடிவு.

பாவம் செய்பவன் பாவம் என்று தெரியாமலோ, அல்லது உணராமலோ செய்துவிட்டால் அவன் எந்த நிலையில் தவ்பா செய்தாலும் அல்லாஹ் ஏற்கின்றான் என்பதே அடிப்படை,  அவன் மரணத்திற்கு முன்னர் கேட்டுவிட்டால் போதுமானது அல்லாஹ் மன்னித்துவிடுவான்.

இமாம் முஜாஹித் அவர்களும் இன்னும் சிலரும் கூறினர்; “தவறுதலாகவோ, வேண்டுமென்றோ தவறு செய்யும் ஒவ்வொருவரும், அதிலிருந்து ஒதுங்கும் வரை மடையனே.” “தவறுசெய்யும் ஒவ்வொரு மனிதனும் மடையனாகவே இருக்கின்றான்.” என்று நபித்தோழர்கள் கூறுவார்கள் என்று இப்னு ஜரீர் ரஹ் அவர்கள் பதிந்துள்ளார். இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: “மடமையின் காரணமாகவே மனிதன் தவறு செய்கின்றான்”. (இப்னு கஸீர்)

எனவே ஒரு மனிதன் தனது மரணத்திற்கு முன்னர், உயிர் தொண்டைக்குழியை அடைவதற்கு முன்னர் பாவமன்னிப்பு தேடுவானாக இருந்தால் அவனது பாவமீழ்ச்சி ஏற்கப்படும் என்பதே இந்த வசனத்தின் வழிகாட்டல்.

இந்த வசன முடிவும் அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது, சிலரது பாவமன்னிப்பு ஏற்கப்படலாம், சிலரது ஏற்கப்படாமல் இருக்கலாம், அல்லாஹ்வே உண்மையாக மன்னிப்பு தேடுவோரையும், போலியாக மன்னிப்பு தேடுவோரையும் அறிந்தவன், அதில் யாருடைய மன்னிப்பை ஏற்கவேண்டும், யாருடையதை ஏற்கக்கூடாது என்பதிலும் நுணுக்கமானவனாக இருக்கின்றான் என்பது அல்லாஹ்வின் ஆற்றல், அவன் யாருக்கும் அணுவளவும் அநியாயமிழைக்கவும் மாட்டான், அவனில் யாருக்கும் குறைகாணாவும் முடியாது. அல்லாஹ் கூறுகிறான்:

அடுத்து, ஒருவன் மரணத்தறுவாய் வரை தவறிழைத்துவிட்டு, மரணத்தின் விளிம்பில், உயிர் தொண்டைக்குழியை அடைந்த நிலையில் மன்னிப்பு கேட்டால் என்ன நிலை என்பது பற்றியே அடுத்த வசனத்தில் அல்லாஹ் எடுத்துரைக்கின்றான்.

உண்மையில் மரணத்தருவாயில் இருக்கும் மனிதன் ‘அவன் நல்லவனா கெட்டவனா என்பதையும், சுவர்க்கவாதியா நரகவாதியா என்பதையும் கண்டுகொள்கின்றான், அதனால் அவனது அந்த நேர புலம்பல்கள் எடுக்கப்படுவதில்லை. இந்த விடயத்தை அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிட்டுக் கூறியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

இதற்கு பிரவ்னின் நிகழ்வு சிறந்த உதாரணமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

அடுத்து இணைவைப்பிலும், குப்ரிலும் மரணிப்போருக்கு மொத்தமாகவே மன்னிப்பில்லை என்று இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்:

அதனால் தான் அவர்களுக்காக மன்னிப்பும் தேடக்கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்:

மரணத்தைப் போன்றே மறுமையின் அடையாளமான சூரியன் மேற்கில் உதிப்பதும் மன்னிப்பின் வாயிலை அடைத்துவிடும்.

அடுத்து அல்லாஹ்வின் மன்னிப்பை இழந்தவர்களுக்கு மறுமையில் தண்டனை நிச்சியம் என்பதை இந்த வசனத்தின் இறுதிப்பகுதி தொட்டுக்காட்டுகின்றது. அல்லாஹ் நம்மை காப்பானாக.

ஜாஹிலிய்ய கால நடைமுறையிலிருந்த, கணவனை இழந்த பெண்களுக்கு நடந்த ஒரு கொடுமையை இந்த வசனம் தடுத்து, பெண்களின் உரிமையை காக்கின்றது.

மேலும் அபூதாவூத் போன்ற ஹதீஸ் புத்தகங்களில் இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் கூற்றாக பதியப்பட்டுள்ளது.’ஜாஹிலிய்ய காலத்தில் ஒரு பெண்ணின்  கனவன் மரணித்துவிட்டால் அந்த பெண்ணை அவனது குடும்பத்தார் அனந்தரமாக எடுத்துக்கொள்வர், அவள் மரணிக்கும்வரை, அல்லது அவள் பெற்ற திருமண நன்கொடையை அவருக்கு கொடுக்கும்வரை தடுத்துவைத்துக் கொள்வார், அதனைத் தடுத்தே அல்லாஹ் இந்த சட்டத்தை இறக்கினான். (அபூதாவூத்:2090,இப்னு அபீ ஹாதிம்)

முஜாஹித் போன்ற விரிவுரையாளர்கள் கூறினர்: ‘ஒரு ஆண் மரணித்துவிட்டால் அவரது மகனே அவரது மனைவிக்கு மிக தகுதியானவராக கருதப்பட்டார், அவர் அவளது மகனாக இல்லாத போது விரும்பினால் திருமணம் முடிப்பார், அல்லது அவர் விரும்பிய அவரது சகோதரன், அல்லது சகோதரனின் மகனுக்கு திருமணம் முடித்துவைப்பார். (இப்னு கஸீர்)

அடுத்து இந்த வசனம் மூலம் இன்னொரு அநியாயமும் தடுக்கப்படுகின்றது, அதாவது தன் மனைவிக்கு அவளது திருமண நன்கொடையாக கொடுத்ததை முழுவதையோ, அல்லது அதில் ஒரு பகுதியையோ, அல்லது அவளது ஒரு உரிமையையோ பலவந்தமாக, அல்லது நிர்ப்பந்தித்து எடுப்பது. இதையும் அல்லாஹ் தடுத்துள்ளான்.

இப்னு அப்பாஸ் ரலி வழியாக அலிய்யுப்னு அபீ தல்ஹா அவர்கள் கூறினார்கள்: ஒரு ஆண் தனது மனைவியோடு வாழ விரும்பாத நிலையில், அவளுக்கு கொடுத்த திருமணக் கொடையை அபகரித்துக்கொள்ளும் நோக்கில் நிர்ப்பந்திப்பது. (அதுவே இந்த வசனத்தில் தடுக்கப்பட்டுள்ளது). இந்த கருத்தையே ளஹ்ஹாக், கதாதா, போன்ற இன்னும் பலரும் கூறியுள்ளார்கள். (இப்னு கஸீர்)

அடுத்து அந்தப் பெண் விபச்சாரம் என்ற குற்றத்தில் ஈடுபட்டுவிட்டாலே கணவனுக்கு மணக்கொடையை திருப்பி எடுக்கலாம், அதனை மீட்டெடுக்க நிர்ப்பந்திக்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளான்.

இந்த சட்டம் ஸூரதுல் பகராவில் சொல்லப்பட்டது போன்றதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள (தெளிவான மானக் கேடான காரியம்) என்றால் ‘அது விபச்சாரம்தான்’ என்று இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஸஈதுப்னுல் முஸய்யப், ஹஸனுல் பஸரீ போன்ற இன்னும் ஏராளமான விரிவுரையாளர்களும் கூறியுள்ளனர். மேலும், அதனைக் கொண்டு ‘கட்டுப்படாமை, மாறுசெய்தல்’ என்பதும் அடங்கும் என்று இப்னு அப்பாஸ் ,இக்ரிமா, ளஹ்ஹாக் போன்றோர் கூறியுள்ளனர், இமாம் இப்னு ஜரீர் அவர்கள் அது ‘விபச்சாரம்,கட்டுப்படாமை, மாறுசெய்தல், கீழ்த்தரமான பேச்சு, அது அல்லாத அனைத்தையும் சேர்த்துக்குக் கொள்ளும்’ என்று கூறியுள்ளார்கள். என்றால் இவைபோன்ற காரணங்களுக்காக ஒருவன் தன் மனைவியை மணக்கொடையை திரும்ப பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிர்ப்பந்திக்கலாம். என்று இப்னு கஸீர் இமாமவர்கள் கூறிவிட்டு, இது சிறந்த கருத்து என்று கூறுகின்றார்கள், (இப்னு கஸீர்)

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள் கூறினார்கள்: (அல் அள்ல் மனைவியை தடுத்துக் கொள்ளல்) என்பது மக்காவில் குறைஷிகளிடம் காணப்பட்டது, அதாவது; ஒரு ஆண் நல்லதோர் பொண்ணை திருமணம் முடிக்க, அவள் அவருடன் இணங்கி நடக்காத போது, அவரது அனுமதியின்றி மறுமணம் செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் அவளைப் பிரிவார், அதற்காக சாட்சிகளை நிறுத்தி அவளுக்கு எதிராக எழுதிக்கொள்வார், அந்தப் பெண்ணை யாராவது மறுமணம் பேசிவந்த நிலையில், அவள் அவனுக்கு உள்ளதை கொடுத்து திருப்தி அடையவைத்தால் திருமணத்திற்கு அனுமதி கொடுப்பான், இல்லையென்றால் அவளை தடுத்துக்கொள்வான், இதுவே அந்த வசனமாகும். (இப்னு கஸீர்)

அடுத்து மனைவியர்களோடு நல்லமுறையில் நடக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். பொதுவாகவே பெண்கள் நல்லமுறையில் நடக்கவேண்டும் என்பதைப் போன்றே ஆண்களும் நல்லமுறையில் நடக்கவேண்டும் என்பது இஸ்லாமிய வழிகாட்டல். அல்லாஹ் கூறுகின்றான்:

திருமண வாழ்வுக்கு நபிகளாரின் சில வழிகாட்டல்கள்:

இந்த நபிமொழி ஆயிஷா ரலி வழியாக ‘ ‘உங்களில் சிறந்தவர் தன் குடும்பத்தவரிடம் சிறந்தவரே, நான் எனது குடும்பத்தவரிடம் சிறந்தவனே’ என்று திர்மிதீ: 3895, இப்னு ஹிப்பான்:4177) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ‘முஹம்மத் பின் யூஸுப் என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் நம்பகமானவராக இருந்தாலும், ஸுப்யானுஸ் ஸவ்ரி அவர்களிடமிருந்து அறிவித்ததில் தவறிவிட்டிருக்கிறார்’என்று விமர்சிக்கப்பட்டிருப்பதோடு, இது அவர் மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது, அதனால் ஹில்யதுல் அவ்லியாவில் இமாவார்கள் ‘இந்த அறிவிப்பில் ஸுப்யானைத் தொட்டு அறிவிப்பது அவர் தனிமைப்பட்டுள்ளார்’ என்று குறித்துக் காட்டியுள்ளார்கள். மேலும் ஹிஷாம் அவர்களிடமிருந்து ‘முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானுத் துபாவீ’ என்பவர் வழியாக ‘தஹதீபுல் ஆசாரில்:(678) பதியப்பட்டுள்ளது, அவரும் ‘முன்கருள் ஹதீஸ், சில சந்தர்ப்பங்களில் தவறுவிடுவார்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். மேலும் ‘ஸாலிஹ் பின் மூஸத்தல்ஹீ’ என்பவர் ஹிஷாம் வழியாக அறிவித்துள்ளார், தாரீகு அஸ்பிஹான். அவர் ‘மத்ரூக், வாஹின்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். அடுத்து ஹிஷாம் அவர்களைத் தொட்டு அறிவிக்கும் பலமானவர்கள் யாரும் இந்த பகுதியை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (இப்னு ஹிப்பான்:3018,3019, அபூதாவூத்:4899, முஸ்னதுத் தயாலீஸீ:1549) அதேநேரம் அல்பானி இமாவார்களும் ஏனையோரும் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
அபூஹுரைரா வழியாக திர்மிதி 1162,இப்னு ஹிப்பான்:4176, அஹ்மத்:7402 பதியப்பட்டுள்ளது, இது ‘முஹம்மத் பின் அம்ர் என்பவர் வழியாகவே பதியப்பட்டுள்ளது, இவர் ‘ஸதூகுன் லஹு அவ்ஹாமுன், என்றும், அபூ ஸலமாவைத் தொட்டு பிரட்டி பிரட்டி அறிவிப்பவர், மக்கள் அவரது செய்தியை தவிர்த்துள்ளனர்,த்வறுவிடுபவர்’ போன்ற வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.(தஹ்தீபுல் கமால்) முஃஜமுல்அவ்ஸதில் (4420) ஹுஸைன் என்பவர் வழியாக வந்துள்ளது அவரைத் தொட்டு அப்பாதுப்னுல் அவ்வாம் அறிவிக்க, அவ்விருவரிடமிருந்து அப்துர் ரஹீம் பின் முஹம்மதிஸ் ஸுகூநீ என்பவர் மட்டுமே அறிவித்துள்ளதாக இமாமவர்கள் பதிந்துள்ளார்கள். அறிஞர் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
இப்னு அப்பாஸ் ரலி வழியாக ‘உங்களில் சிறந்தவர் தன் குடும்பத்தவரிடம் சிறந்தவரே, நான் எனது குடும்பத்தவரிடம் சிறந்தவனே’ என்று (இப்னு மாஜா:1977, ஹாகிம்:7327, இப்னு ஹிப்பான்:4186) பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர், உமாரதுப்னு ஸவ்பான், மஜ்ஹூலுல் ஹால், மஸ்தூர்’ என்று விமர்சிக்கப்பட்டிருப்பதோடு, அவரிடமிருந்து அறிவிக்கும் ஜஃபர் பின் யஹ்யா பின் ஸவ்பான்’ என்பவரும் ‘மஜ்ஹூல், மஸ்தூர்’ என்று விமர்சிக்கப்பட்டவரே. அறிஞர் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

அடுத்து, ஒரு மனிதன் குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் சில தவறுகளைக் கண்டு அதற்காக அந்த மனைவியை வெறுக்கலாம், ஆனாலும் அவளோடு பொறுமையாக வாழலாம், அப்படி வாழ்வதில் அல்லாஹ் சில நலவுகளை ஏற்படுத்தலாம். எனவே குடும்ப வாழ்வில் பொறுமை அவசியம், அதேபோன்று அல்லாஹ்விடம் நல்ல முடிவுகளைக் கேட்பதும், மனைவியின் மாற்றத்திற்காக அல்லாஹ்வை வேண்டுவதும் மிக அவசியமாகும். ஏனெனில் அவனே அனைத்தையும் அறிந்தவனும், மனிதனுக்கு நலவு நாடுபவனாகவும் இருக்கின்றான்.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: (அதிக நலவுகள் என்பது) மனைவிக்கு ஆண் இறக்கம் காட்டுவதும், அதன் மூலம் பிள்ளையை பெற்றெடுப்பதும், அந்த குழந்தை மூலம் அதிக நலவுகள் கிடைப்பதுமாகும். (இப்னு கஸீர்)

உண்மையில் குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளை பெற்றெடுப்பது முரண்பாடுகளை நீக்கி, பிள்ளைகளுக்காகவாவது சந்தோஷமாக வாழ்கின்ற நிலை ஏற்படுவதை தாரளமாக பார்க்கலாம்.

உண்மையில் குடும்ப வாழ்க்கையில் ஒரு தவரைக் கண்டவுடன் அவசரமாக முடிவெடுக்கும் நிலை வரக்கூடாது, அது குடும்பக் கட்டமைப்புக்கு நல்லதல்ல, மாறாக ஒவ்வொருவரிடமும் நல்ல பண்புகளோடு மனித இயல்புகளுக்கு அமைய சில ஒத்துப்போகாத மோசமான பண்புகள் இருக்கலாம், குறைகளை மாத்திரம் பார்க்காமல், பேசாமல், நிறைகளைப் பார்க்கின்ற பழக்கம் வரவேண்டும், அதுவே குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் பல நலவுகளை கொண்டுவரும், இதுவே அல்லாஹ்வின் வழிகாட்டல்.

அடுத்து பெண்களுக்கு கொடுக்கும் திருமணக் கொடை எவ்வளவு பெறுமதிவாய்ந்ததாகவும் இருக்கலாம். அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தராத நிலையில் அதில் யாருக்கும் அளவு தீர்மானிக்க முடியாது. அது மணமகளின் விருப்பத்திற்கும், மணமகனின் வசதிக்கும் ஏற்ப தீர்மானிக்கப்படவேண்டும்.

உமர் ரலி அவர்கள் மஹரில் கட்டுப்பாடு விதித்தார்களா?

திர்மிதியின் அறிவிப்பின் தொடரில்; அறிஞர்களிடம்  ஊகிய்யா என்பது, 40 திர்ஹமாகும், 12 ஊகிய்யா என்பது 480 திர்ஹமாகும்”.

மேலும் இப்னுல் முன்ஸிர் அவர்கள் பதிவு செய்துள்ள ‘உமர் ரலி அவர்கள் ‘நீங்கள் மணக்கொடையில் அதிகரிப்பு செய்யாதீர்கள் என்று கூற, ஒரு பெண்மணி ‘உமரே உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாது, அல்லாஹ் அதற்கு அனுமதியளித்துள்ளான், என்று கூற, உமர் ரலி அவர்கள்; ‘ஒரு பெண் உமரோடு வாதாடி வெற்றிபெற்றார்’ என்று வரும் செய்தியும் பலவீனமானது, அதில் அபூ அப்திர் ரஹ்மான் என்பவர் உமரவர்களிடம் ஏதும் செவிமடுத்ததில்லை, எனவே முன்கதிஃ, மேலும் அதில் வரும் கைஸுப்னு ரபீஃ என்பவர் மனன சக்தி குறைந்தவர் என்று விமர்சிக்கப்பட்டவர்’ என்று இமாம் அல்பானி அவர்கள் கூறியுள்ளார்கள். (இர்வாஉல் கலீல்)

மேலும் ‘ஒரு பெண் சரிக்கு நேர்பட்டார், உமர் தவறிழைத்துவிட்டார்’ என்று ஒரு அறிவிப்பில் வருகின்றது, அது முன்கதிஆன செய்தி என இப்னு கஸீர் இமாமவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதனை உறுதிப்படுத்த பின்வரும் புகாரியின் அறிவிப்பை நோக்கலாம்.

எனவே மஹர் எனும் மணக்கொடை என்பது பெண்களிடம் உள்ள கற்புக்காகவே கொடுக்கப்படுகின்றது.

அடுத்து மஹர் எனும் மணக்கொடை மீட்டெடுக்க முடியாதது என்பதற்கு அல்லாஹ் சொல்லித்தரும் இன்னொரு காரணி அந்தப் பெண்கள் ஆண்களிடம் உறுதியான ஒரு உடன்படிக்கை செய்துள்ளார்கள் என்பதுமாகும்.

இந்த வசனத்தில் ‘உறுதியான உடன்படிக்கை, மீஸாகன் கலீலா’ என்பது திருமண ஒப்பந்தத்தைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ் ரலி, முஜாஹித், சையத் பின் ஜுபைர் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.

இமாம் ரபீஃ பின் அனஸ் அவர்கள் கூறினார்கள்: ‘மீஸாகன் கலீலா’ என்பது ‘நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் பொறுப்பைக் கொண்டே கரம்பிடித்தீர்கள், அவர்களது கற்பை அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டே அனுமதியாக்கிக் கொண்டீர்கள்’ என்ற கூற்றாகும், ‘அல்லாஹ்வின் வார்த்தை என்பது அதுவே திருமண ஒப்பந்தத்தில் சொல்லப்படும் ஷஹாதத் ஆகும்.  (இப்னு கஸீர்)

அதேநேரம் மஹர் குறிப்பிடப்படவில்லையெனில் மனைவிக்கு ‘முத்அத்’ எனப்படும் கணவனின் வசதிக்கு உற்பட்ட செலவுத் தொகை, அல்லது ஆடை மட்டுமே உரித்தாகும். (அல்லாஹு அஃலம்)

அல்லாஹ் கூறுகின்றான்:

இப்படி தலாக்  சொல்லப்பட்டவர்களுக்கு ஒரு உதவித்தொகை  கொடுப்பது என்பது ‘தலாக்’ என்ற  சோதனைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஒரு நலவாக அமைந்து விடும், இப்படி சோதனைக்குள்ளான அவர்களை  ஒரு தொகை கொடுப்பதன் மூலம் மகிழ்விப்பது ஒரு நல்ல குணமாகவே இருக்கின்றது. (அல்லாஹு அஃலம்)

தந்தையின் மனைவியை மகனுக்கு திருமணம் முடிக்க முடியாது, அப்படி செய்வது ஹராம் தடுக்கப்பட்டதாகும். இது தந்தை மார்களுக்கு கண்ணியமும், மதிப்புமாகும்.

இது திருமண ஒப்பந்தம் மூலமே அமுலாகிவிடும். இது அறிஞர்களுக்கிடையில் கருத்துவேற்றுமை இல்லாத இஜ்மாவான ஒரு விடயமாகும்.

அடுத்து, ஒரு தந்தை திருமணத்தின் மூலமோ, அல்லது அடிமை என்ற அடிப்படையிலோ, அல்லது சந்தேகத்தின் அடிப்படையிலோ ஒரு பெண்ணோடு இல்லறத்தில் ஈடுபட்டால் அந்தப் பெண் மகனுக்கு ஹராமாகி விடுவார் என்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர், அதேநேரம் உடலுறவில் ஈடுபடாமல் சேர்ந்திருந்தால், அல்லது பார்க்கக்கூடாத இடத்தை பார்த்துவிட்டால் என்ன சட்டம் என்பதில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர், அதில் அஹ்மத் இமாமவர்கள் அதுவும் ஹராம் தடுக்கப்பட்டது ஏன்று கூறியுள்ளார்கள். (இப்னு கஸீர்)

தந்தையின் மனைவியை திருமணம் முடிக்கும் ஒரு கலாச்சாரம் ஜாஹிலிய்யா காலத்தில் இருந்திருக்கிறது என்பதும் தெளிவாகின்றது, இந்த கருத்தை இப்னு அப்பாஸ் ரலி, கதாதா, அதாஃ போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதனால் தான் (முந்தி நடந்ததைத் தவிர) என்று அல்லாஹ் விதிவிலக்கு செய்திருக்கின்றான்.

பொதுவாகவே ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்ததை வைத்து அல்லாஹ் குற்றம் பிடிப்பதில்லை, அத்தோடு இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் அவர் செய்துவந்த தவறை திருத்தி இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்து இப்படி செய்வது அல்லாஹ்வின் வெறுப்பை பெற்றுத்தரும் ஒரு இழிசெயல் என்பதை இந்த வசனத்தின் முடிவு எடுத்துரைக்கின்றது. பொதுவாகவே மானக்கேடான செயல்களை செய்வதிலிருந்து ஒரு முஃமின் தன்னை காத்துக்கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

அல்லாஹ் கூறுகின்றான்:

அடுத்து ஒரு முஃமின் பாவங்களைக் கண்டாலே விரண்டோடுவான் என்பதே நபிகளாரின் வழிகாட்டல். அல்லாஹ்வும் நெருங்க வேண்டாம் என்றே வழிகாட்டுகின்றான்.

இந்த வசனம் மூலம் திருமணம் முடிப்பதற்கு தடுக்கப்பட்ட, ஒரு ஆண் சாதாரண உறவு வைக்க முடிந்த மஹ்ரமான உறவுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

அதில் முதன்மையானது இரத்த உறவுகள் என்ற அடிப்படையில் பிறப்பின் மூலம் வரக்கூடிய உறவுகள்.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: பிறப்பின் மூலம் ஏழு பேர் மஹ்ரமாவார்கள், திருமணம் மூலம் ஏழு பேர் மஹ்ரமாவார்கள். பிறகு அந்த வசனத்தில் ‘வபனாதுல் உக்தி’ வரை ஓதி விட்டு இதுவே பிறப்பின் மூலமானது என்று கூறினார்கள்.

அவர்கள் ‘தாய்மார்கள், பெண்பிள்ளைகள், உடன் பிறந்த சகோதரிகள், தாயின் சகோதரிகள், தந்தையின் சகோதரிகள், சகோதரனின் பெண்பிள்ளைகள், சகோதரியின் பெண் பிள்ளைகள்‘.

இந்த வசனத்தில் வரும் ‘வபனாதிகும், உங்கள் பெண் பிள்ளைகள்’ என்ற சொல்லிலிருந்து ‘விபச்சாரத்தின் மூலம் பிறந்த பெண் பிள்ளையும் காரணமாக இருந்தவருக்கு ஹராமாகும்’ என்று பெரும்பான்மை அறிஞர்கள் ஆதாரம் பிடித்தனர்,

இது அபூ ஹனீபா, மாலிக், அஹ்மதுப்னு ஹம்பல் போன்ற அறிஞர்களின் நிலைப்பாடாகும், இதில் இமாம் ஷாபிஈ அவர்கள் அந்த பிள்ளை மஹ்ரமாக மாட்டாள் என்று கூறினார்கள்.  ஏனெனில் அவள் சட்டப்பூர்வமான பிள்ளையில்லை, எப்படி அனந்தரம் பெரும் சட்ட வசனத்தில் அவள் இடம்பெறமாட்டாளோ, எனவே அவளுக்கு ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் எப்படி அனந்தர சொத்து கிடைக்காதோ அதேபோன்று இந்த வசனத்திலும் அவள் நுழைய மாட்டாள் என்று கூறினார்கள். (இப்னு கஸீர்) அல்லாஹு அஃலம்.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) மஜ்மூஉல் பதாவா :(32/134), இப்னு குதாமா (ரஹ்) அல்முக்னீ :(7/485)

அடுத்து எப்படி பெற்ற தாய் மஹ்ரமோ அதேபோன்று பாலூட்டிய தாயும் மஹ்ரமாவாள்,

இமாம் மாலிக் அவர்கள் பொதுவாகவே குடித்துவிட்டால் உறவு ஏற்பட்டுவிடும் என்று கூறினார்கள். இக்கருத்து இப்னு உமர் ரலி அவர்களைத் தொட்டு பதியப்பட்டுள்ளது. இதனையே ஸஈதுப்னுல் முஸய்யப், உர்வதுப்னுஸ் ஸுபைர், ஸுஹ்ரீ போன்றோர் கருத்தாக கொண்டிருந்தனர்.

இந்த கருத்தையே இமாம்களான அஹ்மத், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, அபூ உபைத், அபூ ஸவ்ர் போன்றவர்கள் கூறினார், இது அலி ரலி, ஆஇஷா ரலி, இப்னுஸ் ஸுபைர், ஸுலைமான் பின் யாசர், ஸஈத் பின் ஜுபைர் போன்றவர்களைத் தொட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தையே இமாம் ஷாபிஈ அவர்களும் அவர்களது தோழர்களும் கூறினார்கள். இந்தக் கருத்தே ஆதாரத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. அல்லாஹு அஃலம்

அடுத்து பெரும்பாண்மை அறிஞர்களின் கூற்றுப்படி, ‘பால்குடி உறவு ஏற்பட, இரண்டு வயதுக்கு முன்னர் சிறுபராயத்தில் பாலூட்டல் வேண்டும்‘. (இப்னு கஸீர்)

அடுத்து, மனைவியின் தாய் திருமண ஒப்பந்தத்தின் மூலமே மஹ்ரமாகிவிடுகின்றாள். இல்லறத்தில் ஈடுபட்டாலோ ஈடுபடாவிட்டாலோ மஹ்ரமாகிவிடுவாள்.

மனைவியின் (வேறு ஒரு ஆண் மூலம் கிடைத்த) பிள்ளையை பொறுத்தவரை அந்த பெண்ணோடு இல்லறத்தில் ஈடுபடும் வரை மறுமணம் செய்த கணவனுக்கு மஹ்ரமாக மாட்டாள். எனவே இல்லறத்தில் ஈடுபட முன்னர் மனைவியான அந்த தாயை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டால், மறுமணம் செய்த கணவனுக்கு அந்த பிள்ளையை திருமணம் செய்யலாம்.

அலி ரலி அவர்களிடம் ஒரு மனிதன், ஒரு பெண்ணை இல்லறத்தில் ஈடுபட முன்னர் விவாகரத்து செய்தால், அவளது தாயை மணக்கலாமா? என்று கேட்கவே, அவள் மனைவியின் பிள்ளையின் இடத்தில் உள்ளவளாவாள் என்று கூறினார்கள். (இப்னு ஜரீர்)

இதே போன்ற ஒரு நிகழ்வு இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் கேட்கப்பட, அவர்கள் அனுமதி கொடுத்தார்கள், இப்னு உமர் ரலி அவர்கள் தடுத்தார்கள் என்றும், முஆவியா ரலி அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் ‘வேறு பெண்கள் அதிகம் இருக்கின்றார்களே, நான் அல்லாஹ் அனுமதித்ததை தடுக்கவும் மாட்டேன், தடுத்ததை அனுமதிக்கவும்  மாட்டேன்’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)

இதே கருத்து அப்துல்லாஹிப்னு ஸுபைர் ரலி அவர்களைத் தொட்டும் (மஜ்ஹூல் இருக்கும் அறிவிப்பு), முஜாஹித் அவர்களை தொட்டும் பதியப்பட்டுள்ளது, இந்த கருத்தை ஷாபியாக்களில் சிலரும் கூறுகின்றனர்.

மனைவியின் பிள்ளைகள் என்பதே நாடப்படுகின்றது, அவர்கள் கணவனின் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மஹ்ரமிய்யத் உண்டாகும் என்பதே அறிஞர்களில் அதிகமானவர்கள் கருத்து, இது பெரும்பாலும் அவர்கள் கணவனின் பொறுப்பில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் வந்த சட்டமாகவும், மாறாக எதிர்மறையாக விளங்கமுடியாது என்று அவர்கள் கூறினர். இது சூரதுன் நூரின் 33 வது வசனம் போன்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

எனவே நபியவர்களும் மனைவியின் பிள்ளை மஹ்ரமாவதை திருமணத்தைக் கொண்டு மாத்திரமே சம்பந்தப்படுத்தியுள்ளார்கள். இதுவே நான்கு இமாம்களினதும், ஏழு சட்டங்களை மேதைகளினதும், முன்னோர், பின்னோர்களான அதிக அறிஞர்களினதும் நிலைப்பாடாகும்.

சொந்த மகனின் மனைவியும் (மருமகள்) மஹ்ரமாவால், ஆனால் வளர்ப்பு பிள்ளையின் மனைவி மஹ்ரமாக மாட்டாள் என்பதும் தெளிவான ஒரு விடயமாகும். அது ஜாஹிலிய்யா காலத்தில் இருந்த ஒரு நடைமுறையாக இருந்தாலும் இஸ்லாம் அதனை மாற்றியமைத்தது. நபிகளாரின் வளர்ப்பு மகனான ஸைத் அவர்களின் மனைவியே ஸைனப் ரலி அவர்கள், ஸைத் அவர்கள் விவாகரத்து கொடுக்கவே, அல்லாஹ் நபிகளாருக்கு மணமுடித்துவைத்தான்.

அடுத்து இரண்டு சகோதரிகளை ஒரே நேரத்தில் மனைவியாக வைத்திருப்பது தடுக்கப்பட்டதாகும், இஸ்லாத்திற்கு முன்னர் ஒருவர் செய்திருந்தால் அது மன்னிக்கப்படும்.

இது நபித் தோழர்கள், தாபிஈன்கள், இமாம்கள் அனைவரும் ஒன்றுபட்டு கூறிய ஒன்றாகும். எனவே யாராவது ஒருவர் இஸ்லாத்தை ஏற்கும்போது இரண்டு சகோதரிகளை திருமணம் முடித்திருந்தால் இருவரில் ஒருவரை தலாக் விவாகரத்து செய்யவேண்டும்.

அடுத்து, எப்படி இரண்டு சகோதரிகளை ஒரேநேரத்தில் மனைவியாக வைத்திருக்க முடியாதோ அதேபோன்று, ஒரு பெண்ணையும் அவளது தாயின் சகோதரி (சாச்சி) யையும், தந்தையின் சகோதரி (மாமி) யையும்  ஒரே நேரத்தில் மனைவியாக வைத்திருக்க முடியாது. இது நபிகளாரின் கூற்றால் தடுக்கப்பட்டதாகும்.

திருமணத்தோடும், பெண்களோடும் சார்ந்த சில சட்டங்களைக் கற்றுத்தந்த அல்லாஹ், அவற்றை பேணிநடப்பதையே விரும்புகின்றான், அதற்கு மாறுசெய்வதை கடுமையாக வெறுக்கின்றான், ஆனாலும் மனிதன் என்ற அடிப்படையில் தவறு விடும்போது அதனை மன்னிக்கும் பண்பு கொண்ட கருணை மிக்கவன் என்ற பண்புகளைக் கூறி இந்த வசனத்தை முடிக்கின்றான். (அல்லாஹு அஃலம்)

ஸூரதுன் நிஸாவின் முதல் கட்ட விளக்கம் நிறைவு, அல்ஹம்து லில்லாஹ்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *