இஸ்லாம்திருமணத்தைவலியுறுத்துவதுஏன்?

بسم الله الرحمن الرحيم

வீடியோவைப் பார்வையிட இங்கே தட்டவும்! PART-1, PART-2

PDF வடிவில் பார்வையிட CILICK செய்யவும்!

இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துவது ஏன்?

நிகாஹ்எனும் திருமணம்

 “நிகாஹ்” என்பது திருமணத்தை குறிக்கிறது. இது ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தமாகும், இது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கிறது. நிகாஹின் நோக்கம் அன்பையும் கருணையையும் அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தை உருவாக்குவது, மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை அடைவதாகும்.

நிகாஹ் செய்தல் இரு தரப்பின் சம்மதத்தையும், பெண்ணின் பொறுப்பாளி (வலி), மஹ்ர் (மணக்கொடை), மற்றும் சாட்சிகளின் பங்களிப்பையும் கொண்டிருக்க வேண்டும். இதனையே அல்லாஹ் உறுதியான உடன்படிக்கை என்றும், நபியவர்கள் அல்லாஹ்வின் பொறுப்பிற்குற்பட்டது என்றும் கூறினார்கள்.

எனவே இந்த திருமணத்தின் மூலமே குடும்பம் தொடர்கின்றது. இங்கிருந்து தோற்றம் பெரும் குடும்பத்தைப் பற்றி பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம். அந்த அடிப்படையில் இஸ்லாம் திருமணத்தின் மூலம் மனிதனிடம் எதிர்பார்க்கும் சில நல்ல எதிர்ப்பார்ப்புக்களை தொடர்ந்து நோக்குவோம்.

எங்களுக்கான துணையை ஏற்படுத்துபவன் அல்லாஹ் என்ற அடிப்படையில் அவனைப் புரிந்து கட்டுப்படல்.

திருமணத்தை வெறுப்பவன் நபிகளாரின் சமுகத்தில் இடம்பிடிக்க முடியாது என்ற அடிப்படையில் நபிகளாரை புரிந்து பின்பற்றல்.

மனித சமூகத்தை ஆதம் என்ற மனிதன் மூலம் ஆரம்பித்த அல்லாஹ், அடுத்து அவருக்கான ஜோடியை படைத்தான் எனும் போது, அந்த மனித குளம் விருத்தி அடைவதன் முக்கியத்துவத்தையே அது உணர்த்துகின்றது. எனவே முறையான குடும்ப வாழ்க்கை அதனை கட்டிக்காக்கும்.

மேலும் திருமணத்தின் தேவையையும், மனித பரவலாக்கத்தின் பெறுமதியையும் உணர்ந்த இஸ்லாம் துரவரத்தையும், வரவேற்கவில்லை, ஆண்மை நீக்கத்தையும் அனுமதிக்கவில்லை.

திருமணம் இல்லையென்றால் மனித சமூகம் கட்டுக்கோப்பாக வாழமுடியாமல் போய், பெற்றோர்கள், பிள்ளைகள் என்ற உறவுகள் இல்லாமல் போய் மனித சமூகமே சீரழிந்து போகும். விபச்சாரத்தில் மூழ்கி வாழும் மனிதர்களின் நிலையும், அதன் மூலம் கிடைக்கும் குழந்தைகளும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அதனால்தான் கணவன் மனைவிக்கிடையில் மனநிம்மதியையும், அன்பு பாசத்தையும் திருமணத்தின் மூலம் ஏற்படுத்துவதாக அல்லாஹ் கூறுகின்றான்.

நபியவர்களும் பயணங்களில் சிரமப்படும் மனிதனுக்கு நிம்மதியைத் தேடி உடனே வீட்டுக்குவருமாறும், நல்ல மனைவியிடமே நிம்மதி இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.

அதனால்தான் விருப்பமின்றி ஒருவரையொருவர் திருமணம் முடிக்கக்கூடாது, அப்படி முடித்தாலும் அது செல்லுபடியாகாது என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

மேலும் திருமணம் முடிக்கும் இளைஞனுக்கு கன்னிப்பெண்ணை முடிக்குமாறும், பெண்ணைப் பார்த்து, திருப்தியுடன் மணம்முடிக்குமாறும் இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

மனித சமூகத்திற்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட நபிகளாருக்கே அல்லாஹ் திருமண ஜோடிகளை அமைத்தான் என்றால் அதுவே மனித சமூகத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். திருமணமுறை மங்கிப்போன சமூகங்களில் அதன் பாதிப்பைப் பார்க்கலாம்.

திருமணமுறை இல்லையென்றால் விபசாரம் தலைதூக்கும், ஓரினச்சேர்க்கை அதிகரிக்கும், இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் முடித்து வைக்காவிட்டால் முறையற்ற உறவுகள், காதலித்தல் போன்றவை அதிகரிக்கும். இவற்றை இஸ்லாமும், நாகரிகமான மனித சமூகமும் வெறுக்கின்றன.

ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார் என்றால் பொறுப்பாளரிடம் கேற்கலாமே அல்லாமல், திருட்டுத்தனமாக தொடர்பு வைப்பதோ, பொறுப்பாளரின் அனுமதியின்றி திருமணம் முடிப்பதோ, ஓடிச் செல்வதோ  செய்யக்கூடாத காரியமாகும். விரும்பினால் முடித்துத் தருவார், இல்லையென்றால் தவிர்ந்து கொள்வார்.

குறிப்பு: இங்கு ஆண்களை, முடிக்காதீர்கள் என்று விழிக்கும் அல்குர்ஆன் பெண்கள் விடயத்தில் முடித்திக்கொடுக்காதீர்கள் ஏன்று விளிக்கிறது. இதுவும் ஒரு பெண் தானாக முடித்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு சான்றாகும்.

மனிதன் தன் மனைவி மக்களுக்காக உழைக்கிறான், வாழ்வாதாரத்தைத் தேடுகின்றான், பிள்ளை குட்டிகளின் சந்தோசத்திற்காகவே உலகில் பல முயற்சிகளை செய்கின்றான். அப்படியானால் இந்த உலகத்தின் முன்னேற்றம் ஒரு சீரண குடும்ப உருவாக்காத்திற்கு பின்னால் இருக்கின்றது என்பதை புரியலாம்.

அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள் ஆண்கள் பெண்களை நிறுவகிக்க தகுதி பெற்றிருப்பதே அவன் செலவளிக்கின்றான் என்பதனால் தான். அப்படியானால் அவன் உழைப்பதற்கு வழிகளை உருவாக்க வேண்டும், அது உலகை முன்னேற்றுமல்லவா!

இன்னும் பல சந்தர்ப்பங்களில் குடும்பத்திற்காக செலவிடுவதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது என்றால், இதற்காக உழைக்கும் மனிதனால் உலகம் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை, இதுவே உலகில் நடந்துகொண்டுமிருக்கின்றது.

உலகில் சந்தோஷத்திற்காக திருமணம் முடித்தாலும் அதன் மூலம் மறுமையிலும் பல நலவுகள் கிடைக்கின்றன. அந்த நலவுகள் திருமணத்தின் மூலமே கிடைக்கும் எனும் போது அதன் பெறுமதியை உணரலாம்.

எனவே நாமும் இந்த வழிகாட்டல்களை காட்டித்தந்த இஸ்லாத்தின் பெறுமதியை விளங்கி, எமது வாழ்க்கையில் இஸ்லாத்தை எல்லா கோணத்திலும் பின்பற்றி வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணிக்க முயற்சிப்போம்! அல்லாஹ் அதற்கு துணைபுரிவாக!

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *