سُورَةُ الْهُمَزَةِ
ஸூரதுல் ஹுமஸா (புறங்கூறல்)
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர்: ஸூரதுல் ஹுமஸா (குறை கூறுதல்)
இறங்கிய காலப்பகுதி: மக்கீ
வசனங்கள்: 9
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ
وَيْلٌ கேடு/நாசம்/எச்சரிக்கைக்கும் கைசேதத்திற்கும் பாவிக்கப்படும், لِّـ க்கு, كُلِّ எல்லோரும்/அனைத்தும், هُمَزَةٍ புறம் பேசுபவர், لُّمَزَةِ குறை கூறுபவர்
குறைகூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (104:1)
وَيْلٌ வய்ல் என்ற சொல்லைக்கொண்டு பல அருத்தங்கள் நாடப்படுகின்றன, நரகில் இருக்கும் ஒரு ஓடை, பள்ளத்தாக்கு, தண்டனை,அழிவைக்குறிக்கும் ஒரு சொல், சோதனைகள்,விரும்பத்தகாதவை நிகழும்போது பாவிக்கப்படும்.
وَيْلٌ لِّـكُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ
(நாவால்) பெரும் பொய்கூறி, (செயலால்) பாவியான ஒவ்வொருவருக்கும் கேடுதான். (45:7)
قَالُوْا يٰوَيْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِيْنَ
“எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் வரம்பை மீறியவர்களாகிவிட்டோம்” என்று கூறினர். (68:31)
இமாம் பக்ருதீனுர் ராஸி அவர்கள் கூறும் போது; வய்ல் என்பது வெறுப்பையும், இழிவையும் குறிக்கும் சொல்லாகும், வய் என்பதே அடிப்படை, லாமுடன் சேர்க்கப்பட்டுள்ளது, பரிதாப்பபடுவதற்கு ஹா வை சேர்த்து வய்ஹ் என்று பாவிக்கக்கப்படும் என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)
அதற்கு ஆதாரமாக பின்வரும் வசனத்தை அல்வாஉல் பயானில் குறிப்பிட்டுள்ளார்கள்;
وَيْكَاَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُۚ
அந்தோ நாசமே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடிவருக்கு சம்பத்துகளை ஏராளமாகக் கொடுக்கின்றான், (தான் நாடியவருக்கு) அளவோடும் கொடுக்கின்றான், (28:82)
மேலும் ஆச்சர்யப்படுவதற்கும், கைசேதப்படுவதற்கும் பாவிக்கப்படும்.
قَالَتْ يٰوَيْلَتٰٓى ءَاَلِدُ وَاَنَا عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِىْ شَيْخًا ؕ اِنَّ هٰذَا لَشَىْءٌ عَجِيْبٌ
“என்னுடைய கேடே! நான் கிழவியாகவும், என்னுடைய இக்கனவர் ஒரு வயோதிபராகவும் இருக்க, நான் பிள்ளை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!” என்று அவருடைய (மனைவியாகிய) அவர் கூறினார். (11:72)
قَالَ يَاوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ۚ ۙ
அவர் “என்னுடைய கேடே இந்தக் காகத்தைப் போல் ஆவதற்குகூட இயலாதவனாக நான் ஆகிவிட்டேனா? அவ்வாறு என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேன்” (5:31)
அது பொதுப்படையாக வந்திருப்பதும், எச்சரிக்கையுடன் வந்திருப்பதுமே இந்த வித்தியாசமான கருத்துக்களுக்கு காரணமாகும். எனவே எச்சரிக்கை, தண்டனையுடன் சேர்ந்து வந்திருந்தால் அதுவே நாடப்படும்.
فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنَ النَّارِؕ
ஆகவே, நிராகரித்துவிட்டவர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் (உண்டு). (38:27)
فَوَيْلٌ لِّلَّذِيْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ يَوْمٍ اَلِيْمٍ
ஆகவே, அநியாயம் செய்தவர்களுக்குத் துன்புறுத்தும் நாளுடைய வேதனையின் கேடுதான் இருக்கிறது. (43:65)
(இந்த கருத்துக்கள் அல்வாஉல் பயானில் பதியப்பட்டவை)
ஹுமஸா, லுமஸா என்றால், அவ்விரண்டும் புறம் பேசுவதைக் குறிக்கும் என்றும், குறை கூறி, புறம் பேசுவதை குறிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
அல்குர்ஆனில் வித்தியாசமான இரு அருத்தங்களோடு பாவிக்கப்பட்டுள்ளது.
هَمَّازٍ مَّشَّآءٍۢ بِنَمِيْمٍۙ
(அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன். (68:11)
وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِؕ
உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம், உங்களில் சிலர் சிலரை (அவருக்கு வைக்கப்படாத) பெயர்களால் அழைக்கவும் வேண்டாம், (49:11)
وَمِنْهُمْ مَّنْ يَّلْمِزُكَ فِى الصَّدَقٰتِ
(நபியே! நீர்) தர்ம(ங்களை பங்கீடு செய்யும் விஷயங்)களில் உம்மைக் குறை கூறுவோரும் அவர்களில் (சிலர்) இருக்கின்றனர், (9:58)
எனவே லம்ஸ் என்பது புரத்தைப் போன்றல்லாது முன்னிலையில் குறை கூறுதல் என்பதை குறிக்கும் என்பதற்கு இவை சான்றாகும்.
எனவே வித்தியாசமான இரு மோசமான பண்புகளைக்கொண்டவன் வய்ல் என்ற வார்த்தையைக் கொண்டு எச்சரிக்கப்பட தகுதியானவனே.
மேலும் ஹம்ஸ் என்பது கையால் முன்னிலையில் குறைத்து மதிப்பிடுவதற்கும், லம்ஸ் என்பது நாவல் குறை கூறுவதற்கும், கம்ஸ் என்பது கண்ணால் ஜாடை மூலம் குறை சொல்வதற்கும் பாவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதில் பாவிப்பதாகும். (அல்வாஉல் பயான்)
اۨلَّذِىْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ
اۨلَّذِىْ எவன்/ஒருவன் (தெளிவுபடுத்த ஒரு வசனம் தேவை), جَمَعَ சேகரித்தான், مَالً செல்வம், وَّعَدَّدَهٗ இன்னும் அதை எண்ணினான்/கணக்கிட்டான்
அவன் சொத்தை சேகரித்து, அதனை எண்ணி வைத்துக்கொண்டிருந்தான். (104:2)
இந்த வசனம் முன்னால் இருக்கும் மோசமான குணத்திற்கு காரணத்தை எடுத்துரைக்கிறது, பணத்தை சேகரிப்பது தவறல்ல, மாறாக அந்தப் பணம் இந்த உலகில் நீடூடிகாலம் வாழ வைக்கும் என்ற எண்ணத்தில் கணக்கிடுவதே தவறாகும், அப்படி இருப்பது பல தவறுகளை இழைப்பதற்கு காரணமாகிவிடும்.
يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ
يَحْسَبُ கருதுகிறான்/நினைக்கிறான், اَنَّ நிச்சயமாக/இதற்கு ஒரு எழுவாயும், பயணிலையும் அவசியம், مَالَ செல்வம், اَخْلَدَ அவன் நிரந்தரமாக்கினான்
நிச்சயமாக, தன் பொருள் தன்னை (என்றென்னும் உலகில்) நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணுகிறான். (104:3)
பணத்தை வைத்து இப்படி நினைப்பதே கேவலமாகும், அதுவே அந்த எச்சரிக்கை விடப்படுவதற்கும் காரணமாக இருந்தது, ஏனெனில் அவன் மரணத்தின் பின் எழுப்பப்படுவதை மறுத்துவிட்டான். இது ஸூரா கஹ்பில் இடம்பெறும் நிகழ்வை ஒத்ததாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَدَخَلَ جَنَّتَهٗ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚ قَالَ مَاۤ اَظُنُّ اَنْ تَبِيْدَ هٰذِهٖۤ اَبَدًا ۙ وَّمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآٮِٕمَةً
மேலும், அவன் தனக்குத் தானே அநியாயம் இழைத்துக் கொண்டவனாக தன் தோப்புக்குள் நுழைந்து “இவை ஒரு காலத்திலும் அழிந்து விடுமென நான் எண்ணவில்லை”35, மேலும், “மறுமை நாள் நிலைபெறக்கூடியது என்றும் நான் எண்ணவுமில்லை, (18:36)
இந்த வசனங்கள் மரணத்தையும், அதற்கு பின்னரான மறுமை வாழ்க்கையையும் மறந்து, நிராகரித்து வாழ்பவன் தன்னை அறியாமல் மோசமான பண்புகளையுடையவனாக மாறிவிடுவான் என்பதற்கு ஸூரா தகாஸுரின் ஆரம்ப வசனங்கள் போன்று சிறந்த எடுத்துக்காட்டாகும். அல்லாஹ் கூறுகின்றான்
اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ لِيَوْمٍ عَظِيْمٍۙ يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَؕ
அளவு நிறுவையில் மோசடி செய்வோர் – நிச்சயமாக, தாம் (மறுமையில் அகிலத்தாரின் இரட்சகன் முன்னிலையில் மனிதர்கள் நிற்கும்,மகத்தான ஒரு நாளைக்காக உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லையா? (83:4-6)
இப்படி உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று தப்புக்கணக்கிட்டு, வழிதவறி செல்லும் மனிதனை அல்லாஹ் நெறிப்படுத்துவதற்காக பின்வரும் வசனங்களில் நரகைக் கொண்டு எச்சரிக்கிறான்.
كَلَّا لَيُنْۢبَذَنَّ فِى الْحُطَمَةِؗۖ
كَلَّا அவ்வாறல்ல, لَيُنْۢبَذَنَّ நிச்சயமாக அவன் எறியப்படுவான், فِى லே/ல், الْحُطَمَةِؗۖ நரகின் பெயர்
அவ்வாறன்று! (அல்லாஹ்வின் மீது சத்தியமாக) ஹூதமாவில் அவன் எறியப்படுவான். (104:4)
கல்லா என்றால் தப்புக்கணக்கிட்டவனை கண்டிக்கும் முகமாக ‘அவ்வாறு நினைத்தது போன்றல்ல’ என்று கூறிவிட்டு, அவன் நரகில் எறியப்படுவான் என்று எச்சரிக்கிறான்.
ஹுதமா என்பது ‘உடைத்து, நொறுக்குதல்’ என்று அருத்தம் கொண்ட ‘அல் ஹத்ம்’ என்ற அரபு சொல்லிலிருந்து வந்த பெயர் சொல்லாகும். இங்கு நரக நெருப்பு என்று பின்னால் வரும் வசனங்களால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் நரகம் அதில் வீசப்படும் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு, இன்னும் அதிகம் இருக்கிறதா என்று கேட்கக்கூடியதாகும்.
وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحُطَمَةُ
مَاۤ எது/என்ன, اَدْرٰٮ அவன் அறிவித்தான்
(நபியே!) “ஹூதமா” என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? (104:5)
இந்த கேள்வி நரகை எச்சரிப்பதற்காகும், பொதுவாகவே அல்குர்ஆன் கேள்விகேட்டு உணர்த்தும் ஒரு போக்கை மேட்கொள்ளும், அதற்கு பல உதாரணங்களைப் பார்க்கலாம். அந்த நரகத்தின் அகோரத்தன்மை குர்ஆன் நெடுகிலும் பல இடங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, இங்கு தொடர்ந்து அல்லாஹ் பின்வரும் வசனங்களைக் கொண்டு தெளிவுபடுத்துகின்றான்.
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ
نَارُ நெருப்பு, الْمُوْقَدَةُ எரிக்கப்பட்டது
அல்லாஹ்வின் மூட்டப்பட்ட (நரக) நெருப்பு. (104:6)
الَّتِىْ تَطَّلِعُ عَلَى الْاَفْـــِٕدَةِ ؕ
الَّتِىْ அது/எத்தகையது (பெண்பால்), تَطَّلِعُ எட்டிப் பார்க்கிறான்/ப்பான், عَلَى மீது/மேலே, الْاَفْـــِٕدَةِ உள்ளங்கள்
அது எத்தகையதென்றால், (தேகத்தில் பட்டவுடன்) இதயங்கள் மீது சென்றடையும், (104:7)
உடலை சூழ்ந்திருக்கும் நெருப்பின் தாக்கம் உள்ளத்தை சென்றடையும், உள்ளத்தை குறித்து சொல்வதற்கு காரணம், உள்ளமே மனிதன் தப்பாக சிந்தித்து முடிவெடுக்க காரணமாக இருந்தது. அடுத்து அதன் தாக்கம் உள்ளத்தை அடைந்தால் வேதனையின் உச்சத்தை அடையும் என்பதுமே.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நரக தண்டனை பெறுவதில் மிகவும் குறைந்த தண்டனை உடையவர், இரண்டு கால்களுக்கு கீழலும் நெருப்பு கங்குகள் வைக்கப்படும் மனிதனாவான், அதன் காரணமாக அவனது மூளை கொதிக்கும். (புகாரி:6561, முஸ்லிம்)
اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌ
اِنَّ நிச்சயமாக/ இதற்கு எழுவாய், பயனிலை அவசியம், عَلَيْهِمْ அவர்கள் மீது, مُّؤْصَدَةٌ மூடப்பட்டது/சூழப்பட்டது
நிச்சயமாக அது அவர்களின் மீது (சூழ்ந்து) மூடப்பட்டதாய் இருக்கும். (104:8)
فِىْ عَمَدٍ مُّمَدَّدَةٍ
فِىْ லே/ல், عَمَدٍ தூண்கள், مُّمَدَّدَةٍ உயரமானது/நீளமானது
நீண்ட தூண்களில் (அவர்கள் கட்டப்பட்டிருப்பார்கள்). (104:9)
நரக வாசிகள் தண்டிக்கப்படும் விதமே இந்த இரண்டு வசனங்கள் மூலம் தெளிவுபடுத்தப்படுகின்றன.
நெருப்பு அவர்களை சூழ்ந்திருக்கும் என்பதும், அதில் அவர்கள் நீண்ட தூண்களில் கட்டப்பட்டிருப்பார்கள், அல்லது துளையுள்ள நீண்ட இரும்பு தூண்களுக்குள் செலுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள், அல்லது சங்கிலிகளால் விலங்கிடப்பட்டு, தூண்களில் கட்டப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதும் எசரிக்கைக்குறியதே. அல்லாஹ் கூறுகின்றான்:
وَاِذَاۤ اُلْقُوْا مِنْهَا مَكَانًـا ضَيِّقًا مُّقَرَّنِيْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ؕ
மேலும், அவர்கள் (சங்கிலியால்) கட்டப்பட்டவர்களாக, அதில் மிக்க நெருக்கடியான ஓர் இடத்தில் போடப்பட்டால் (கஷ்டத்தைத் தாங்க முடியாமல்) அழிவை அங்கு அவர்கள் அழைப்பார்கள். (25:13)
اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَا۟ وَاَغْلٰلًا وَّسَعِيْرًا
நிராகரிப்போர்க்கு சங்கிலிகளையும், விலங்குகளையும் (ஜுவாலை விட்டு எரியும்) நரகத்தையும், நிச்சயமாக நாம் தயார்செய்து வைத்திருக்கின்றோம். (76:4)
وَتَرَى الْمُجْرِمِيْنَ يَوْمَٮِٕذٍ مُّقَرَّنِيْنَ فِى الْاَصْفَادِۚ سَرَابِيْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰى وُجُوْهَهُمُ النَّارُۙ
அன்றியும், அந்நாளில் குற்றவாளிகளை சங்கிலிகளில் இணைக்கபபட்டவர்களாக நீர் காண்பீர்.49, அவர்களுடைய சட்டைகள் தாரால் (செய்யப்பட்டு) இருக்கும், அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடிக் கொண்டுமிருக்கும். (14:50)
எனவே இந்த ஸூராவில் சொல்லப்பட்ட விடயங்களை வைத்து வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வோம்.
ஸூரா ஹுமஸாவின் விளக்கம் முடிவுற்றது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ